சீனா, இந்திய எல்லையில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை அளித்து வரும் நிலையில் தற்போது சீனா Line of Actual Control (LAC) அருகில் மற்றும் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாகச் செயல்படும் புதிய ரயில் பாதையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே டெக்னாலஜி என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது இந்தியாவுக்கு ஒரு புதிய பிரச்சனையை எழுந்துள்ளது. இந்தியச் சீன எல்லையில் இரு நாடுகளின் கட்டுப்பாட்டைப் பகுதிகளைப் பிரிக்கும் எல்லைக் கோடு தான் Line of Actual Control (LAC).
TAR அரசு
திபெத் தன்னாட்சிப் பகுதி (TAR) அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட புதிய ரயில்வே திட்டத்தின் படி, ரயில் பாதை Line of Actual Control (LAC) அருகிலும் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாகவும் இயக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்தியா மற்றும் திபெத்
இந்த நிலையில் எல்ஏசி அருகே சீனாவின் செயல்பாடு இந்தியா மற்றும் திபெத் ஆகிய இரு நாடுகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
மனோஜ் பாண்டே
ஜனவரி 12 அன்று, இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, எல்ஏசி பகுதியில் சீனப் படைகளின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
அக்சாய் சின் பகுதி
சுமார் 38,000 சதுர கிமீ பரப்பளவு கொண்ட அக்சாய் சின் பகுதியை 1950 களில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் 1962 இந்தியா-சீனா போரின் போது அப்பகுதியின் மீது அதன் இராணுவ பிடியை பலப்படுத்தியது. அப்பகுதி இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வந்தது.
4,000 கி.மீ ரயில் வலையமைப்பு
திபெத் நாட்டின்'medium to long-term ரயில்வே திட்டம்' திபெத் தன்னாட்சிப் பகுதி (TAR) அரசின் ரயில் வலையமைப்பை தற்போதைய 1400 கி.மீ.யில் இருந்து 2025-க்குள் 4,000 கி.மீ.க்கு விரிவுபடுத்த உதவும் என்று ரயில்வே டெக்னாலஜி என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில்வே டெக்னாலஜி
ரயில்வே டெக்னாலஜியின் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் நேபாளத்தில் இருந்து சீனாவின் எல்லைகள் வரை தொடரும் புதிய வழித்தடங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கும். மேலும் திட்டமிடப்பட்ட பாதை ரூடோக் வழியாகவும், LAC இன் சீனப் பக்கத்தில் உள்ள பாங்காங் ஏரியைச் சுற்றியும் பயணிக்கும்.
திபெத் - Shigatse
திபெத் நாட்டின் Shigatse தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, உத்தேசிக்கும் ரயில் பாதை நேபாள எல்லையில் வடமேற்கே செல்லும், அதற்கு முன் அக்சாய் சின் வழியாக வடக்கே துளையிட்டு Hotan, Xinjiang-ல் முடிவடையும் என ரயில்வே டெக்னாலஜியின் அறிக்கை கூறுகிறது.
ரயில் பாதை
ஷிகாட்ஸே முதல் Pakhuktso வரையிலான முதல் பகுதி 2025 ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஹோட்டனில் முடிவடையும் மீதமுள்ள லைன் பகுதி 2035 ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திபெத் குழந்தைகள்
சமீபத்தில் ஐநா வல்லுநர்கள், திபெத்திய சிறுபான்மையினரின் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளை residential school system வாயிலாகச் சீன அரசின் கொள்கைகளால் திபெத்திய மக்களைக் கலாச்சார ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்தனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications