இந்தியாவை ஆட்டிப்படைக்க போகும் சீனா.. கதறும் இந்திய வர்த்தகர்கள்..!

டெல்லி: கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியாவை ஆட்டிப்படைத்து சீனா, இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் காலடி எடுத்து வைக்க தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் வரும் காலங்களில் அனைத்து பொருட்களும் மேடு இன் சைனாவாகத் தான் இருக்கும் போல.

அந்தளவுக்கு சீனா தற்போது இந்தியாவில் காலூன்றி உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிகத்தை நிலைநாட்டி வரும் சீனா, தற்போது ஆட்டோமொபைல் துறையில் விரிவு செய்ய தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இந்திய ஸ்மார்ட்போன்களை விட, சீனாவின் போன்கள் தான் அதிகம் என்பதிலேயே சீனா எந்தளவுக்கு இந்தியாவில் ஊடுருவியுள்ளது என்பதை நாம் அறிய முடியும்.

இந்தியாவில் நுழையும் சீனா நிறுவனங்கள்

இந்தியாவில் நுழையும் சீனா நிறுவனங்கள்

கிரேட் வால் நிறுவனம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மெதுவாக பரப்பி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்கள் முதல், ஆட்டோமொபைல்/ எலக்ட்ரிக் வாகனங்கள் வரை டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் நுகர்வோர் கொடுப்பனவுகள் வரை தனது சந்தைகள் நிலை நாட்டி வருகிறது.

இந்தியா முக்கிய பங்கு

இந்தியா முக்கிய பங்கு

இதே நேரத்தில் அமெரிக்கா நிறுவனங்களான அமேசான் மற்றும் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசியல் வெப்பத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.14 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட சீனா, 2024ல் 20 டிரில்லியன் டாலர்களாக மாறும் பாதையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் நாடாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரையில், ஹாங்காங்கை தளமாகக் கொண்ட கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் படி, சீனா ஸ்மார்ட்போன் பிராண்டுகள் 2019ம் ஆண்டில், 72% கை பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 60% ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பிபிகே குழுமத்தை சார்ந்த ஓப்போ, விவோ, ரியல்மி மற்றும் ஒன்பிளஸ் பிராண்டுகள் 37% பங்கினை வகித்ததாகவும் கூறப்படுகிறது.

உற்பத்தியில் முதலீடு

உற்பத்தியில் முதலீடு

இதே ஜியோமி ,ரெட்மி மற்றும் ஓபோ பிராண்டுகளுடன் 28 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் ஜியோமி மற்றும் பிபிகே குழுமத்தின் சார்பில் சீனா பிராண்டுகள் இந்தியாவில் மொபைல் உற்பத்தி மற்றும் அதன் மற்ற சில ஸ்பேர் சாதனங்களில் அதிக முதலீடுகளை செய்துள்ளன.

பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஜியோமி தற்போது இந்தியாவில் ஏழு உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இது தாய்வானின் பன்னாட்டு நிறுவனமான பாக்ஸ்கான் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்ப உற்பத்தியாளாரான ஃப்ளேக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இதனை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் விற்கப்படும் சீனா ஸ்மார்ட்போன்களில் 99% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், இதில் ஏழு ஆலைகளில் ஜியோமி 25,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய பிராண்டுகள் எங்கே

இந்திய பிராண்டுகள் எங்கே

சீனாவின் இந்த அதிரடியான தாக்குதலுக்கு மத்தியில் மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ், லாவா கார்பன் என அழைக்கப்படும் உள்நாட்டு மொபைல்களை தற்போது அரிதான செயலாகி விட்டது. சொல்லப்போனால் இவையெல்லாம் உண்மையில் இன்னும் இருக்கின்றனவா? என்றால் அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

தொடர்ந்து முதலீடு

தொடர்ந்து முதலீடு

இவ்வாறு ஸ்மார்ட்போன், ஆட்டோமொபைல் துறை என பல துறைகளில் சீனா தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிலும் போட்டிகள் அதிகரித்து வருகின்றன. இப்படி ஒரு நிலையில், இந்திய பிராண்டுகள் மறுபிரவேசம் செய்வது கொஞ்சம் சவாலான விஷயம் தான் என் நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+