சீனாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் செலவு மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, உலகளாவிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளன. குறிப்பாக டிரம்ப் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு சீனாவில் இருந்து அதிகப்படியான நிறுவனங்கள் வெளியேற துவங்கியுள்ளது. இதனால் சீனா பிளஸ் ஒன் மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது.
இந்த 'சீனா பிளஸ் ஒன்' கொள்கை இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பை வழங்குகிறது. அதிலும், தமிழ்நாடு இந்த வாய்ப்பை பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டு வருகிறது என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Centre for Social and Economic Progress என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அரவிந்த் சுப்ரமணியன், சீனா, தைவான், வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா FDI ஈர்ப்பதில் மிகவும் போராடி வருவதாக சுட்டிக்காட்டினார். உலகளாவிய சப்ளை செயினில் இந்திய நிறுவனங்கள் முழுமையாக இணைக்கப்படாததால், குறிப்பாக மனிதர்கள் அதிகம் ஈடுப்படும் துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி திறன் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியன், இந்தியாவின் உற்பத்தித் துறை, குறிப்பாக மனிதர்கள் அதிகம் ஈடுப்படும் துறைகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சிறு நிறுவனங்களின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் சரியாக செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், "சீனா பிளஸ் ஒன்" போக்கு இந்தத் துறையை புத்துயிர்ப்பிக்கவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
சீனா பிளஸ் ஒன் கொள்கை மூலம் சீனாவில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களும் பிற நாட்டு நிறுவனங்களும் தற்போது மாற்று இடங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது இதற்கு முக்கியமான காரணம் டிரம்ப் வெற்றி தான்.
டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா நாட்டின் அதிபராக 2வது முறையாகப் பதவியேற்கும் நிலையில் சமுக வலைத்தளத்தில் முக்கியமான பதிவைச் செய்துள்ளார். டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடனே மெக்சிகோ மற்றும் கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாகவும், சீனா மீதும், சீன பொருட்கள் மீதும் 25 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சீனா+1 கொள்கை மூலம் இதுவரையில் அதிகம் நன்மை அடைந்தது என்றால் அது இந்தியா தான். இதன் வாயிலாக சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பிற நாட்டு நிறுவனங்களும் தனது தொழிற்சாலையை இந்தியாவுக்கு மாற்றும் முயற்சியில் இறங்கும்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications