உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடான சீனா-வில் மக்கள் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைச் செலுத்த முடியாது எனக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா ஏற்கனவே கொரோனா, உற்பத்தி சரிவு, விநியோகம் பாதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் என்ற மோசமான பாதிப்பு சீனாவை சூழ்ந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறை
சீன ரியல் எஸ்டேட் துறை கடந்த ஒரு வருடமாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டு வருகிறது. எவர்கிராண்டே நிறுவனத்தின் தோல்வியில் இருந்து சீன அரசு மற்றும் தனியார் வங்கிகளில் போதுமான கடன்களை ரியல் எஸ்டேட் துறைக்கு அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் ஒருகாலத்தில் சீனா பொருளாதாரத்திற்கு முக்கிய வர்த்தகத் துறையாக விளங்கிய கட்டுமான துறை தற்ரபோது மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
சீன மக்கள்
இந்நிலையில் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த சீன மக்கள், கட்டி முடிக்கப்படாத அதாவது கட்டிக்கொண்டு இருக்கக் கூடிய கட்டுமான திட்டங்களுக்காக வாங்கிய கடனுக்கு ஈஎம்ஐ செலுத்த முடியாது என அறிவித்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட்-ம் வங்கிகளும் செய்வது அறியாது நிற்கிறது..
100க்கும் அதிகமான திட்டங்கள்
சீன மக்களுக்கு ரியல் எஸ்டேட் துறை மீதான நம்பிக்கை குறைவதைத் தாண்டி அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் 50க்கும் அதிகமான நகரங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமாகக் கட்டி முடிக்கப்படாத திட்டங்களுக்குக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த முடியாது என மக்கள் அறிவித்துள்ளதாகச் சீன ரியல் எஸ்டேட் இன்பர்மேஷன் கார்ப் அறிவித்துள்ளது.
தொடர்ந்து வளர்ச்சி
திங்கட்கிழமை இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை 28 ஆக இருந்தது, செவ்வாய்க்கிழமை 58 ஆகவும், புதன் கிழமை 100 ஆகவும் உயர்ந்துள்ளது என ஜெப்ரீஸ் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் சுஜின் சென் தெரிவித்துள்ளார்.
சங்கிலி உடைந்தது
சீன மக்கள் வீட்டுக்கடனுக்கான பணத்தைச் செலுத்தினால் தான் வங்கிகளிடம் இருந்து கட்டுமானத்திற்கான பணத்தை ரயில் எஸ்டேட் நிறுவனங்கள் பெறும். தற்போது இந்தச் சங்கிலி உடைந்துள்ளதால், கட்டிக்கொண்டு இருக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடையும்.
58 பில்லியன் டாலராக
சீனாவின் மொத்த கடனில் வெறும் 1 சதவீத கடன் அளவு இந்த 100 திட்டங்களாக இருந்தால் சீனாவின் வாராக் கடன் 58 பில்லியன் டாலராக உயரும். இது கட்டாயம் சீன சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications