உற்பத்தியிலும், தொழில்நுட்பத்திலும் முடி சூடா மன்னாக இருக்கும் சீனா பல துறையில் இருந்தாலும், விமான தயார்ப்பில் இதுவரையில் இல்லாமல் இருந்தது. சீனா போர் விமானங்களை சொந்தமாக தயாரித்தாலும் இதுவரையில் பயணிகள் விமான துறையில் களமிறங்காமலேயே இருந்தது.
பயணிகள் விமான போக்குவரத்து சந்தையில் சீனா மிகப்பெரிய சந்தையை கொண்டு இருக்கும் வேளையில் இத்துறையில் சீன நிறுவனம் இல்லாமல் இருப்பதும், தொடர்ந்து ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் விமானங்களையே வாங்கி பயன்படுத்தி வந்தது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என 2008ல் சீனா C919 என்ற பெயரில் விமானத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தது. இந்த திட்டத்தில் பல தடைகள், பல சோதனைகளை தாண்டி தற்போது 160 பயணிகள் உடன் ஷாங்காய் முதல் பெய்ஜிங் வரையில் சுமார் 2 மணிநேரம் 25 நிமிடம் முதல் முறையாக வர்த்தக ரீதியாக பறந்து புதிய சாகாப்தம் படைத்துள்ளது சீனா.
அடுத்த 10 -15 வருடத்தில் ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனங்களுக்கு இணையாக உலக நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்யலாம்.
சீனா அரசின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான Commercial Aircraft Corporation of China உருவாக்கிய விமானம் தான் இந்த C919, 2008 உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் 2017ல் இந்த விமான முதல் சோதனை ஓட்டத்தை செய்தது. இதை தொடர்ந்து பல சோதனைகளை செய்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சீனா சிவில் ஏவியேஷன் நிர்வாகம் இந்த விமானத்தை விற்பனை செய்யவும், மக்களை ஏற்றி பறக்கவும் தகுந்தது என ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்கியது.
இந்த நிலையில் முதல் C919 விமானத்தை சீன அரசு விமான போக்குவரத்து சேவை நிறுவனமான China Eastern Airlines-க்கு விற்பனை செய்தது. இந்த விமானத்தில் தான் ஞாயிற்றுக்கிழமை 160 விமானங்கள் உடன் ஷாங்காய் முதல் பெய்ஜிங் வரையில் முதல் வர்த்தக ரீதியான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தது.

C919 விமானம் அனைத்து தட்டபவெப்ப நிலையிலும் பயணித்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதைவிட முக்கியமாக பயணிகள் விமானத்தின் முக்கிய சோதனையான 100 மணிநேர பயண சோதனைகளையும் முடித்துள்ளது.
டிசம்பர் 9 ஆம் தேதி முதல் C919 விமானத்தை China Eastern Airlines-க்கு டெலிவரி கொடுக்கப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு முடிவில் சுமார் 32 வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமாக் 1035 விமானங்களுக்கன ஆர்டர் குவிந்துள்ளது.

இதன் மூலம் பயணிகள் விமான போக்குவரத்து சந்தையில் சீனா புதிய புரட்சியை செய்யப்போகிறது. இதுமட்டும் அல்லாமல் சீனாவின் வருகை போயிங், ஏர்பஸ் மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கும் நிலை மாறும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications