உலகளவில் பயணிகள் விமானங்கள் என்றால் இரண்டே நிறுவனம் தான், ஒன்று பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ், மற்றொன்று அமெரிக்காவின் போயிங் ஆகியவை மட்டுமே. இந்த நிறுவனங்களின் விமானங்களை மட்டுமே உலகின் அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தி வருகிறது.
இந்த ஆதிக்கத்தை உடைக்க சீன பல ஆண்டுகளாக முயற்சி செய்து தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டது போலவே சீனாவுக்கு விமானங்களுக்கு, அதன் உதிரிபாகங்ளுக்கும் பல்வேறு தடைகளும், நெருக்கடிகளும் கொடுத்து வந்த நிலையில், சீனா இத்துறையில் தன்னிறைவை பெற வேண்டும் என்ற இலக்குடன் COMAC என்னும் நிறுவனத்தை உருவாக்கியது.

இந்த நிறுவனம் பல வருடங்களாக ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் ஈடுப்பட்டு வெற்றிகரமான C919, C929, ARJ21 என்ற 3 வகை விமானங்களை தயாரித்து உள்நாட்டு விமான சேவையில் மட்டுமே பயன்படுத்தி வெற்றிக்கண்டது.
இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும் திட்டமிட்டு இதற்காக களத்தில் இறங்கியுள்ளது.
COMAC நிறுவனங்களின் விமானங்களுக்கு இதுவரையில் அமெரிக்காவின் FAA, ஐரோப்பாவின் EASA அமைப்புகளின் சான்றிதழ் இதுவரையில் அளிக்கப்படாத காரணத்தால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாதது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் விற்க முடியாத நிலையில் உருவாகியுள்ளது.
இந்த தடைகளை உடைத்து சீனா தனது விமானத்தை திறனை நிரூபணம் செய்ய முதல் முறையாக அண்டை நாடான மங்கோலியாவுக்கு சர்வதேச விமான சேவையை அளிக்க திட்டமிட்டு உள்ளது. சீனா மங்கோலியாவை தேர்வு செய்ய முக்கியமாக காரணம் உள்ளது இதுதான் சுவாரஸ்யமான விஷயம்.

ஏர் சைனா தினமும் 3 விமானங்களை சீனாவின் பெய்ஜிங் மற்றும் மங்கோலியாவின் Ulaanbaatar நகரங்களுக்கு இயக்கி வருகிறது. ஆனால் இதற்காக ஏர் சைனா ஏர்பஸ், போயிங் விமானங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எப்படி COMAC விமானங்களை சீனா பயன்படுத்துகிறது..?
மற்ற நாடுகளை போல் அல்லாமல் மங்கோலியா தனது வான்பரப்பை வேற எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் சொந்தமாக நிர்வாகம் செய்கிறது. இதனால் அமெரிக்காவின் FAA, ஐரோப்பாவின் EASA சான்றிதழ் இல்லாமல் வரும் விமானம் மங்கோலியா நினைத்தால் இயக்க முடியும்.
இந்த ஒரு வழியை பயன்படுத்தி தான் சீனா தற்போது தனது சொந்த விமானத்தை சர்வதேச நாடுகளுக்கு கொண்டு செல்கிறது. இது விமான போக்குவரத்து துறையில் பெரும் புரட்சியாக இருப்பது மட்டும் அல்லாமல் ஏர்பஸ், போயிங்-யின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்.
இதேவேளையில் சீனாவின் COMAC, மங்கோலியாவை தொடர்ந்து நைஜீரியா, மலேசியாவுக்கு அடுத்து தனது விமானத்தை இயக்க முயற்சி செய்து வருகிறது. இதேவேளையில் ஐரோப்பாவின் EASA அமைப்பு ஜனவரி 2026ல் இருந்து COMAC விமானங்களை சோதனை செய்ய துவங்கி பல முக்கிய சோதனை, ஆய்வுகளில் வெற்றி கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications