அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு வேட்டு.. சீனா-வின் அலிபாபா எடுத்த முடிவு.. கைக்கு வரும் 95000 கோடி ரூபாய்!

உற்பத்தி, உலோகம், எலக்ட்ரானிக்ஸ், EV என பல துறையில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்தி உலக நாடுகளுக்கு பெரும் சிம்மசொப்பனமாக மாறி இருக்கும் வேளையில் ஏஐ துறையிலும் இதே ஆதிக்கத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே ஏஐ சேவை துறையில் உலகளாவிய நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் விதமாக அமெரிக்க நிறுவன ஏஐ மாடல்களை விடுத்து சீனாவின் ஒப்பன் சோர்ஸ் மாடல்களை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த நிலையில் Qwen என்னும் ஏஐ மாடலை உருவாக்கிய உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான அலிபாபா ஹாங்காங் பங்கு சந்தையில் சுமார் 80 பில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு வேட்டு.. சீனா-வின் அலிபாபா எடுத்த முடிவு.. கைக்கு வரும் 95000 கோடி ரூபாய்!

பொதுவாக சீனாவில் பெரிய நிறுவனங்கள் பட்டியிலிடப்பட்ட பின்பு இதுபோன்று அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யாது, இந்த வகையில் அலிபாபா மிகவும் அரிதாக 95000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து இதன் மூலம் வரும் பணத்தை மொத்தமாக ஏஐ கட்டமைப்பு மற்றும் அதன் திறனை மேம்படுத்துவதில் அதிக முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த வருடம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பெட் மற்றும் இன்டெல் ஆகியவை தனது நிதி தேவைக்காக இதே முறையில் பங்குகளை விற்பனை செய்தது. இதை தொடர்ந்து 3வது பெரிய நிறுவனமாக அலிபாபா தனது பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.

Also Read

ஹாங்காங் பங்குச்சந்தையில் 2021க்கு பின்பு நடக்கும் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இது திகழ்கிறது, இதேபோல் 2019க்கு பின்பு அலிபாபா தனது பங்குகளை பொது சந்தையில் விற்கிறது. முதலில் சிறிய தொகைக்கு மட்டுமே பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்ட அலிபாபா மக்களின் அதிகப்படியான டிமாண்ட் காரணமாக தனது பங்கு விற்பனை அளவை 80 பில்லியன் ஹாங்காங் டாலருக்கு அதிகரித்துள்ளது.

இந்த 95000 கோடி ரூபாய் தொகையை முழுவதுமாக ஏஐ பிரிவில் முதலீடு செய்ய உள்ளதால் உலகளாவிய ஏஐ ரேசில் தனத இடத்தை பலப்படுத்துகிறது சீனா. அலிபாபா சுமார் 710 மில்லியன் பங்குகளை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் விலையை காட்டிலும் 3.6 சதவீதம் தள்ளுபடியில் 112.70 ஹாங்காங் டாலர் மதிப்புக்கு விற்பனை செய்ய உள்ளது.

Recommended For You

அலிபாபா நிறுவனத்தில் நிர்வாக அதிகாரம் ஜாக் மா கையில் இருந்து வெளியேறிய பின்பு இந்நிறுவனம் ஏஐ கம்பியூட்டிங், கிளவுட் சேவைகள், ஏஐ சிப், LLM ஆகியவற்றுக்கு தான் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. மற்ற சேவைகளுக்கு அதன் நிலையான வர்த்தக வளர்ச்சியையை தொடர்வதற்கான முதலீட்டை மட்டுமே செய்து வருகிறது.

மேலும் அலிபாபா நிறுவன்ததின் சிஇஓ Eddie Wu Yongming கூறுகையில் ஏஐ துறையில் முதலீடு செய்யப்படும் முதலீடுகள் அடுத்த 3 வருடத்தில் லாபத்தை கொடுக்கும் என அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+