டெல்லி: சீனாவைச் சேர்ந்த பல போலி நிறுவனங்களை இந்தியாவில் பதிவு செய்து, அதன் மூலம் மோசடிகளில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
டெல்லி. கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், சீனாவின் போலி நிறுவனங்கள் செயல்படுவதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம் புகார் தெரிவித்தது.
இது தொடர்பாக, மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறையின் கீழ் செயல்படும் விசாரணை அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு விசாரணையை (SFIO) துவக்கியது.
அதரடி சோதனை
ஹரியானாவின் குர்கானில் உள்ள ஜில்லியான் கன்சல்டன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பெங்களூரில் உள்ள பினைன்டி பிரைவேட் லிமிடெட், தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள ஹூசிஸ் கன்சல்டிங் லிமிடெட் உட்பட, 32 சீன நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
யார் யார் இயக்குனர்கள்?
இந்த சோதனையின் மத்தியில் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், பலவும் போலியானவை என்பதும் தெரியவந்தது. மிக சாதாரண வேலைகளில் உள்ள சாமானியர்களை, இந்த நிறுவனங்களின் இயக்குனர்களாக நியமித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. சீன போலி நிறுவனத்தின் இந்த மோசடிக்கு மூளையாக டார்ட்சே என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் பீஹாருக்கு தப்பிச்சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சீனா தப்ப திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது.
டார்ட்சே கைது
கடந்த சனிக்கிழமையன்று பீஹார் சென்ற அதிகாரிகள், டார்ட்சேவை கைது செய்துள்ளனர். ஜில்லியான் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்துக்கு டார்ட்சேவும், சீனாவைச் சேர்ந்தவரும் இயக்குனர்களாக இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டு உள்ள டார்ட்சேவின் ஆவணங்களில் அவர் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ நம்பிக்கை
கைது செய்யப்பட்டுள்ள டார்ட்சேவை மேற்கோண்டு டெல்லி அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் இன்னும் பல மோசடிகள் அமபலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீனா நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வருவதும், அதனை அமலாக்க துறையினர் கண்டறிவதும் தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில் சீன நிறுவனங்களின் இதுபோன்ற மோசடிகள் இன்னும் சீன நிறுவனங்கள் மீதான அவ நம்பிக்கையை அதிகரிக்க வழிவகுக்குகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications