4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சிஸ்கோ.. டெக் ஊழியர்கள் கதறல்..!

உலகின் முன்னணி டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் டெக் நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ, தனது வர்த்தகத்தையும், நிதி நிலையையும் மறுசீரமைப்பு செய்யும் வகையில் தனது மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

தற்போது வெளியான தகவல்கள் படி சிஸ்கோ தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 83000 ஊழியர்களை வைத்துள்ள நிலையில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் சுமார் 4100 பேர் தங்களது பணியை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிஸ்கோ

சிஸ்கோ


இந்தியாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அதிகம் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் பட்டியலில் சிஸ்கோ முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிஸ்கோவின் பணிநீக்கம் டெக் ஊழியர்கள் மத்தியில் அடுத்த அதிர்ச்சி செய்தியாகவே உள்ளது.

13.6 பில்லியன் டாலர் வருவாய்

13.6 பில்லியன் டாலர் வருவாய்

சிஸ்கோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 13.6 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாகவும், உலகளவில் ஏற்பட்டு உள்ள வர்த்தகச் சரிவைக் காரணம் காட்டி தற்போது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

38000 ஊழியர்கள் பணிநீக்கம்

38000 ஊழியர்கள் பணிநீக்கம்

நவம்பர் மாதத்தில் மட்டும் மெட்டா, அமேசான், டிவிட்டர் ஆகிய 3 நிறுவனங்கள் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 38000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக layoffs.fyi என்னும் டேட்டா அக்ரிகேட்டர் நிறுவனத்தின் தரவுகள் கூறுகிறது.

2022 ஆம் ஆண்டுப் பணிநீக்கம்

2022 ஆம் ஆண்டுப் பணிநீக்கம்

2022 ஆண்டுத் துவக்கம் முதல் டெக் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, இந்த நிலையில் 2022ல் டெக் துறையில் அதிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்த முன்னணி நிறுவனங்கள் எது தெரியுமா.

டாப் 10

டாப் 10

Shopify - 1000 ஊழியர்கள், காயின்பேஸ் - 58 ஊழியர்கள், அமேசான் - 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளது, மைக்ரோசாப்ட் - 1000 ஊழியர்கள், Stripe - 1100 ஊழியர்கள், Lyft - 600 ஊழியர்கள், ஸ்னாப்சாட் - 6000 ஊழியர்கள், டிவிட்டர் - 3000 ஊழியர்கள், மெட்டா - 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இன்று சோமேட்டோ

இன்று சோமேட்டோ

இன்று தீபேந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனத்தில் டெக்னாலஜி, ப்ராடெக்ட், மார்கெட்டிங் என அனைத்து முக்கியக் கார்பரேட் நிர்வாகப் பிரிவில் இருந்தும் 3 சதவீத ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் எட்டெக் நிறுவனங்கள் 2022ல் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 உயர் அதிகாரிகள்

3 உயர் அதிகாரிகள்

கடந்த 2 வாரத்தில் மட்டும் சோமேட்டோ இணை நிறுவனர் மோஹித் குப்தா உட்பட 3 உயர் அதிகாரிகள் தங்களது பணியை ராஜினாமா செய்தனர், 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முன் இந்த 3 உயர் அதிகாரிகளையும் ராஜினாமா செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+