உலகின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றான சிட்டி வங்கி சுமார் 13 நாடுகளில் செய்து வரும் ரீடைல் வங்கியியல் சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிட்டி குரூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகி இனி வெல்த் மேனேஜ்மென்ட் சேவையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன் வாயிலாக 13 நாடுகளில் இருக்கும் சர்வதேச நுகர்வோர் சேவை பிரிவில் இருந்து விலக நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சீனா, இந்தியா உட்பட 13 மாநாடுகளில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகும் சிட்டிகுரூப் இனி சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன், ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமே இப்பிரிவில் சேவை அளிக்க உள்ளது.
சிட்டி குரூப் மார்ச் மாதத்தில் நியமித்த புதிய சீஇஓவான ஜேன் ப்ராசர் கூறுகையில், ரீடைல் வங்கி சேவையில் சந்தையில் இருக்கும் பிற வங்கிகளுக்கு இணையாகப் போட்டிப்போடும் அளவிற்கான வடிவம் இல்லாத காரணத்தால் வளர்ச்சி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் வளர்ச்சியை இரட்டிப்பு செய்யும் வகையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
சிட்டி குரூப் ஆசியாவில் மட்டும் சுமார் 224 ரீடைல் கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. 2020 முதல் கஸ்யூமர் வர்த்தகத்தை ஆசியவில் மூடிய சிட்டி குரூப் சுமார் 6.5 பில்லியன் டாலர் வருவாய் உடன் 123.9 பில்லியன் டாலர் அளவிலான வைப்பு நிதியை வைத்திருந்தது.
சிட்டி குரூப்-கிற்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் டிரேடிங் வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானம் கிடைக்கும் காரணத்தால் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 சந்தைகளில் இருந்து ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகுகிறது.