எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலை தனது ஆய்வின் மூலம் உலக நாடுகளுக்கு பறைசாற்றிய கிளாடியா கோல்டின் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிளாடியா கோல்டின், பல நூற்றாண்டுகளாக பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்கு பற்றி உலகளவில் முதல் முறையாக விரிவான கணக்கீட்டை வழங்கினார். அவரது ஆராய்ச்சியில் பல்வேறு மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் பாலின சம்பள இடைவெளி உருவாக முக்கிய ஆதாரங்களை வெளிப்படுத்தியது.

2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெளியிடுவதில் கடைசி விருது தான் இந்த எக்னாமிக் சையின்ஸ் பிரிவு விருது. இந்த விருதைத் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீட்டை ஆய்வு செய்து ஒரு பெண் பெற்றுள்ளதன் மூலம் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கிளாடியா கோல்டின் ஆய்வில் தொழிலாளர் சந்தையில் பாலின வேறுபாடுகளுக்கான முக்கியக் காரணங்கள் கண்டறியப்பட்டது. மேலும் உலகளாவிய தொழிலாளர் சந்தையில் பெண்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். மேலும் வேலை செய்யும் பெண்கள், ஆண்களை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
கோல்டின் தனது ஆய்வுக்காகச் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளையும், கோப்புகளையும் சேகரித்தார். இதை அடிப்படையாக வைத்து வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி, ஏன் மாறிவிட்டன என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை முன்வைத்தார்.
மேலும் கிளாடியா கோல்டின் ஆய்வில் 200 ஆண்டுகளில் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீடு ஏறுமுகத்தில் இல்லாமல் U அமைப்பிலான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பதை நிரூபித்தார். இதேபோல் திருமணமான பெண்களின் தொழிற் சந்தையில் பங்கேற்பு 19 நூற்றாண்டின் முற்பகுதியில் விவசாயச் சமூகத்திலிருந்து தொழில்துறை சமூகமாக மாறியதும் குறைந்தது.

ஆனால் இதே திருமணமான பெண்களின் தொழிற் சந்தையில் பங்கேற்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேவைத் துறையின் வளர்ச்சி அடைந்த போது அதிகரிக்கத் தொடங்கியது எனக் கிளாடியா கோல்டின் தனது ஆய்வில் ஆதாரங்கள் உடன் காட்டியுள்ளார்.
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சையின்ஸ் அமைப்பால் இன்று எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளரின் விபரம் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான விருதுகளை அறிவிக்கப்பட்டது.
பொருளாதாரப் பிரிவில் விருது 1968 இல் ஸ்வீடன் நாட்டின் மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது. ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த விருது Bank of Sweden Prize in Economic Sciences என்று அறியப்படுகிறது.
2007-2008 நிதி நெருக்கடியில் வங்கி திவாலானது மூலம் அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த உதவிய ஆராய்ச்சிக்காகக் கடந்த ஆண்டு முன்னாள் பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கே, டக்ளஸ் w டயமண்ட் மற்றும் பிலிப் டைப்விக் ஆகியோருக்கு இந்த மாபெரும் விருது கொடுக்கப்பட்டது. இதுவரையில் பொருளாதாரப் பிரிவுகளில் நோபில் பரிசு பெற்ற 92 பேரில் இருவர் மட்டுமே பெண்கள்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications