எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலை தனது ஆய்வின் மூலம் உலக நாடுகளுக்கு பறைசாற்றிய கிளாடியா கோல்டின் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிளாடியா கோல்டின், பல நூற்றாண்டுகளாக பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்கு பற்றி உலகளவில் முதல் முறையாக விரிவான கணக்கீட்டை வழங்கினார். அவரது ஆராய்ச்சியில் பல்வேறு மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் பாலின சம்பள இடைவெளி உருவாக முக்கிய ஆதாரங்களை வெளிப்படுத்தியது.

2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெளியிடுவதில் கடைசி விருது தான் இந்த எக்னாமிக் சையின்ஸ் பிரிவு விருது. இந்த விருதைத் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீட்டை ஆய்வு செய்து ஒரு பெண் பெற்றுள்ளதன் மூலம் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கிளாடியா கோல்டின் ஆய்வில் தொழிலாளர் சந்தையில் பாலின வேறுபாடுகளுக்கான முக்கியக் காரணங்கள் கண்டறியப்பட்டது. மேலும் உலகளாவிய தொழிலாளர் சந்தையில் பெண்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். மேலும் வேலை செய்யும் பெண்கள், ஆண்களை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
கோல்டின் தனது ஆய்வுக்காகச் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளையும், கோப்புகளையும் சேகரித்தார். இதை அடிப்படையாக வைத்து வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி, ஏன் மாறிவிட்டன என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை முன்வைத்தார்.
மேலும் கிளாடியா கோல்டின் ஆய்வில் 200 ஆண்டுகளில் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீடு ஏறுமுகத்தில் இல்லாமல் U அமைப்பிலான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பதை நிரூபித்தார். இதேபோல் திருமணமான பெண்களின் தொழிற் சந்தையில் பங்கேற்பு 19 நூற்றாண்டின் முற்பகுதியில் விவசாயச் சமூகத்திலிருந்து தொழில்துறை சமூகமாக மாறியதும் குறைந்தது.

ஆனால் இதே திருமணமான பெண்களின் தொழிற் சந்தையில் பங்கேற்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேவைத் துறையின் வளர்ச்சி அடைந்த போது அதிகரிக்கத் தொடங்கியது எனக் கிளாடியா கோல்டின் தனது ஆய்வில் ஆதாரங்கள் உடன் காட்டியுள்ளார்.
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சையின்ஸ் அமைப்பால் இன்று எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளரின் விபரம் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான விருதுகளை அறிவிக்கப்பட்டது.
பொருளாதாரப் பிரிவில் விருது 1968 இல் ஸ்வீடன் நாட்டின் மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது. ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த விருது Bank of Sweden Prize in Economic Sciences என்று அறியப்படுகிறது.
2007-2008 நிதி நெருக்கடியில் வங்கி திவாலானது மூலம் அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த உதவிய ஆராய்ச்சிக்காகக் கடந்த ஆண்டு முன்னாள் பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கே, டக்ளஸ் w டயமண்ட் மற்றும் பிலிப் டைப்விக் ஆகியோருக்கு இந்த மாபெரும் விருது கொடுக்கப்பட்டது. இதுவரையில் பொருளாதாரப் பிரிவுகளில் நோபில் பரிசு பெற்ற 92 பேரில் இருவர் மட்டுமே பெண்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications