தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சீமான், உதயநிதி, கமல்ஹாசன், திருமாவளவன் ஆகிய முக்கியத் தலைவர்களின் கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ள இந்த வேளையில் சென்னையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் முதல் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசுகையில், இப்பகுதி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகத் தான் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் ஐடி ஊழியர்களின் பணிச் சுமை குறைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு டிவிட்டரில் மக்களின் கருத்தை பாருங்க.





இந்தியாவின் மிகவும் முக்கிய வர்த்தகத் துறையாகவும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு துறையாகவும் இந்திய ஐடி துறை திகழ்கிறது. சொல்லப்போனால் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூண் ஆக ஐடி துறை விளங்குகிறது என்றால் மிகையில்லை.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் லாக்டவுன் காலத்தில் பாதிப்பு அடையாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் ஒரு துறையாகவும் இந்திய ஐடி துறை விளங்குகிறது. இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் நிலையில் இதன் கட்டமைப்பு உலகளவில் விரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications