சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒரு திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக இவர்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்கு செல்வதில் சிரமம்: தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பங்களில் ரேஷனில் வாங்க கூடிய அரிசி, பருப்பு உள்ளிட்டவைதான் அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது . மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைக்கு சென்று காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு வருவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்காக அவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

தாயுமானவர் திட்டம்: இந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தாயுமானவர் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது . கூட்டுறவுத்துறை சார்பாக தமிழ்நாட்டை சேர்ந்த வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வது தான் தாயுமானவர் திட்டம்.
இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு திட்டம் என அவர் கூறியிருக்கிறார் .அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பதில் இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சி என குறிப்பிட்டு இருக்கிறார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடையில் சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து இந்த திட்டத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

யாரெல்லாம் பயன் பெறலாம்: தமிழ்நாட்டில் 21.70 லட்சம் பேர் இந்த திட்டம் மூலம் ரேஷன் பொருட்களை நேரடியாக தங்கள் வீட்டிலேயே டெலிவரி பெற இருக்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த 34 , 809 ரேஷன் கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்களும், 1,27, 797 மாற்று திறனாளிகளும் என மொத்தமாக 21, 70, 454 பேர் பயனடைய இருக்கின்றனர். ரேஷன் அட்டையில் இருப்பவர்களின் விவரங்களை வைத்து அரசே இவர்களை அடையாளம் கண்டுவிட்டது.
திட்டம் எப்படி செயல்படும்: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடையே இவர்களின் வீடு தேடி வந்துவிடும். அதாவது கூட்டுறவு துறை சார்பாக ஒரு வாகனத்தில் ரேஷன் கடையில் இருக்கும் அரிசி ,பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் எடை போடும் இயந்திரம் , பிஓஎஸ் கருவி ஆகியவற்றுடன் ஊழியர்கள் வீட்டிற்கே வருகை தருவார்கள்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோரின் ரேஷன் கார்டை பெற்று கைரேகை பெற்று அவர்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த திட்டத்திற்காக அரசுக்கு 30 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications