தமிழ்நாடு முதல்வர் விஜய் கரூர் சந்திப்புக்காக சென்னை விமான நிலையத்திற்கு தனது கான்வாய் உடன் வந்தடைந்தார். இந்த முறை டோயோட்டா வெல்பயர் காரில் கமாண்டோ மற்றும் கான்வாய் உடன் வந்தார் விஜய்.
கரூர் பயணம் விஜயின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று, தேர்தலுக்கு முன்பு நடந்த தவெக-வின் பிரச்சார கூட்டத்தில் மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் மரணம் அடைந்தனர். அன்று கூட்டத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் விஜயை கூப்பிட கூப்பிட நிற்காமல் போனது இன்றும் பேச்சப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வராக விஜய் பதவியேற்று 60 நாட்களுக்கு பின்பு இதே மக்களை சந்திக்க கரூர் வருகிறார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து அதன்பின்பு சாலை வழியாக கரூர் வந்துக்கொண்டு இருக்கிறார் விஜய். மதியம் 12.45 மணிக்கு கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது, இதே கரூரில் தான் தேர்தலுக்கு முன்பு தவெக-வின் மக்கள் சந்திப்பு கூட்டம் நிறுத்தப்பட்டது.

மே 10ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற விஜய் ஜூன் 1 ஆம் தேதி திருச்சி சென்று தன்னை வெற்றிப்பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதை தொடர்வந்து பதவியேற்றிய 60வது நாளில் இன்று ஜூலை 10ஆம் தேதி கரூர் வந்துள்ளார். இன்று நடக்கும் முக்கிய கூட்டத்தில் விஜய்-யின் பேச்சு தான் எலோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் விஜய் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடவும் வாய்ப்புள்ளதாலேயே இந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
12.45 மணிக்கு துவங்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் முடிந்த உடன், கரூர் தாந்தோணிமலையில் இருக்கும் அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தை ரோடு ஷோ ஆக மாற்றுகிறார் விஜய்.
இதன் பின்பு 2.50க்கு சுற்றுலா மாளிகையில் இருந்து கிளம்பி 3 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்க உள்ளார்.
இதோடு கரூரில் மணவாசி பகுதியில் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் விஜய்.


Click it and Unblock the Notifications