4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் குறித்து மாநிலம் முழுவதும் எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கும் நிலையில், ஒரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய், தனது அமைச்சரவையில் முதல்முறையாக பெரிய அளவிலான மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் நான்கு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் எம். சாய் குமார் , அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ரகசிய அறிக்கை தயாரித்து தந்ததாகவும் அதன் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் நடைபெற இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!!

ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள், அவர்களின் நிர்வாக திறன் மற்றும் அவர்கள் மீதுள்ள புகார்கள் குறித்து விரிவான அறிக்கை முதலமைச்சர் கைக்கு சென்றுள்ளதாம். இந்த அறிக்கையின் அடிப்படையில் 4 அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

Also Read

குறிப்பாக சர்ச்சைகளில் சிக்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், போக்குவரத்து துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் துறை அமைச்சர் கே. ஜகதீஸ்வரி, மனித வள மேலாண்மை துறை அமைச்சர் டி. சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. போதை மருந்து பயன்படுத்தியதாக வெளியான வீடியோ, வன்முறையாக பேசியதாக வெளியான ஆடியோ என பல்வேறு புகார்களின் அடிப்படையிலும் துறை ரீதியான செயல்பாடுகள் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!!

அதே போல அமைச்சர்கள் எஸ். கமலி மற்றும் எஸ். ராஜேஷ் குமார் ஆகியோரின் துறைகளில் மாற்றம் இருக்கலாம் என கருதப்படுகிறது. ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையை விட முக்கியமான துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நிர்வாகத்தை மேம்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு எடுப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, நிர்வாக வசதிக்காக சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். பின்னர் இரண்டாம் கட்டத்தில் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த தலைவர்களுக்கு, இடைத்தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Recommended For You

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்,விஜயபாஸ்கர் ஆகியோர் அண்மையில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர்கள். இவர்கள் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் பட்சத்தில் இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+