விஜய் தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கி நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு முக்கியமான வார்னிங்-ஐ கொடுத்துள்ளார் முதல்வர் விஜய்.
தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி மற்றும் அரசு நிர்வாகத்தை வழங்கும் நோக்கில் தவெக (TVK) அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக வாட்ஸ்அப் நம்பர் மூலம் புகார் அளிக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் நீட்டிசியாக அரசு ஊழியர்கள், அரசு அமைப்புகள் தாண்டி அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், விஜய் பேசிய போது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் எவ்விதமான ஊழல், லஞ்சம் மற்றும் நிர்வாக முறைகேடுகள் இருக்க கூடாது என அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களுக்கும், அமைச்சகங்களுக்கும் கடுமையான உத்தரவிட்டார்.
இதேபோல் ஒவ்வொரு துறையிலும் அனைத்து மட்டத்திலும் முறைகேடு இல்லா, லஞ்சம் இல்லா நிர்வாகத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தள்ளார். இதை சாத்தியப்படுத்த அமைச்சர்கள் அனைவரும் ஒழுக்கத்துடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியானது.
இதைவிட முக்கியமாக விஜய், லஞ்சம் அல்லது முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். உறவினர்கள், தெரிந்தவர்கள், கட்சியினர், அதிகாரிகள் அல்லது வேறு யாராக இருந்தாலும் விதிவிலக்கு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீது விதிவிலக்கு இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பதவியும் பறிக்கப்படும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் மறைமுகமாக எச்சரித்தார்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாக விஜய் இந்த எச்சரிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் இக்கூட்டத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய ஒப்புல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications