இந்தியாவில் கொரோனாவால் பலர் வேலைவாய்ப்பினை இழந்து வந்த நிலையில், ஏப்ரல் மாதம் 88 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகியுள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் சராசரி மாதாந்திர வேலைவாய்ப்பு 2 லட்சமாகத் தான் அதிகரித்து வந்தது. 88 லட்சம் வேலைவாய்ப்பு என்பது குறிப்பிட்ட அளவிலான நபர்கள் வேலை இல்லாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.
வேலையிழப்பு
கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலைவாய்ப்புகளை இழந்தது, இந்த ஆண்டு தொடக்கம் முதல் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை பணியை விட்டு நீக்கியது போன்ற காரணங்களால் வேலையின்மை அதிகரித்து இருந்தது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 12 மில்லியன் நபர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
புதிய வேலைவாய்ப்புகள் எப்படி அதிகம்?
இப்போது கொரோனா தொற்று குறைந்து மீண்டும் பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதும் அதிகரித்துள்ளது எனவே ஏப்ரல் மாதம் புதிதாக 88 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை 8.8 மில்லியன் அதிகரித்து 437.2 மில்லியனாக உள்ளது.
துறைவாரியான நிலவரம்
ஏப்ரல் மாத சேவை துறையில் 67 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தொழில்துறையில் 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித் துறையிலும், 40 லட்சம் கட்டுமான துறையிலும் உருவாகியுள்ளது.
விவசாயத் துறை
அதே நேரம் 54 லட்சம் வேலைவாய்ப்புகள் விவசாயத் துறையில் ஏப்ரல் மாதம் சரிந்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு அறுவடை காலம் முடிவடைந்தது, கோதுமை உற்பத்தி குறைந்ததும் காரணம் என கூறுகின்றனர்.
கவனம் தேவை
தின கூலிகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களில் இந்த உயர்வு அதிகமாக இருந்ததால், புதிய தொழில்துறை வேலைகள் சிறந்த தரமாக இருக்க வாய்ப்பில்லை என்று அறிக்கை கூறுகிறது.
வேலையின்மை விகிதம்
இந்தியாவில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதம் இருந்த 7.60 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) அண்மையில் தெரிவித்து இருந்தது. இந்தியாவில் அதிகபட்சமாக ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 34.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் ஆறுதல் அளிக்கும் விதமாக 4.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications