இந்தியாவில் கொரோனாவால் பலர் வேலைவாய்ப்பினை இழந்து வந்த நிலையில், ஏப்ரல் மாதம் 88 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகியுள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் சராசரி மாதாந்திர வேலைவாய்ப்பு 2 லட்சமாகத் தான் அதிகரித்து வந்தது. 88 லட்சம் வேலைவாய்ப்பு என்பது குறிப்பிட்ட அளவிலான நபர்கள் வேலை இல்லாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.
வேலையிழப்பு
கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலைவாய்ப்புகளை இழந்தது, இந்த ஆண்டு தொடக்கம் முதல் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை பணியை விட்டு நீக்கியது போன்ற காரணங்களால் வேலையின்மை அதிகரித்து இருந்தது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 12 மில்லியன் நபர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
புதிய வேலைவாய்ப்புகள் எப்படி அதிகம்?
இப்போது கொரோனா தொற்று குறைந்து மீண்டும் பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதும் அதிகரித்துள்ளது எனவே ஏப்ரல் மாதம் புதிதாக 88 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை 8.8 மில்லியன் அதிகரித்து 437.2 மில்லியனாக உள்ளது.
துறைவாரியான நிலவரம்
ஏப்ரல் மாத சேவை துறையில் 67 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தொழில்துறையில் 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித் துறையிலும், 40 லட்சம் கட்டுமான துறையிலும் உருவாகியுள்ளது.
விவசாயத் துறை
அதே நேரம் 54 லட்சம் வேலைவாய்ப்புகள் விவசாயத் துறையில் ஏப்ரல் மாதம் சரிந்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு அறுவடை காலம் முடிவடைந்தது, கோதுமை உற்பத்தி குறைந்ததும் காரணம் என கூறுகின்றனர்.
கவனம் தேவை
தின கூலிகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களில் இந்த உயர்வு அதிகமாக இருந்ததால், புதிய தொழில்துறை வேலைகள் சிறந்த தரமாக இருக்க வாய்ப்பில்லை என்று அறிக்கை கூறுகிறது.
வேலையின்மை விகிதம்
இந்தியாவில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதம் இருந்த 7.60 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) அண்மையில் தெரிவித்து இருந்தது. இந்தியாவில் அதிகபட்சமாக ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 34.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் ஆறுதல் அளிக்கும் விதமாக 4.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications