கொரோனா வைரஸ் மனிதர்களின் உடல் நலத்தை மட்டும் பாதிக்கவில்லை. பொருளாதார வாழ்கையையும் சிதைத்துக் கொண்டு இருக்கிறது.
கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது, இந்தியாவில் பல கோடி பேருக்கு வேலை இழப்புகள் ஏற்பட்டது. கோடிக் கணக்கான மக்களுக்கு, முதலாளிகள் மற்றும் கம்பெனிகள் சம்பளத்தில் கை வைத்தார்கள். இன்னும் எத்தனையோ கோடி மக்களுக்கு சம்பள பாக்கியையே பெரிதாக பாக்கி வைத்திருக்கிறார்கள்.

மேலே சொன்ன பிரச்சனைகளில் சம்பளப் பிடித்தம், சம்பளக் குறைப்பு போன்ற பிரச்சனைகளைக் கூட ஓரளவுக்கு சமாளித்துவிடலாம். ஆனால் வேலை இழப்புகளைத் தான் ஜூரணித்துக் கொள்ள முடியவில்லை.
கொரோனா லாக் டவுன் காலத்தில், அதாவது மே 2020-ல் இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 23.5 சதவிகிதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் இருந்து மெல்ல லாக் டவுன் எல்லாம் படிப் படியாக தளர்த்தப்பட்டன. இந்த ஜூன் 2020-ல் வேலை இல்லா திண்டாட்டம் 11 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.
இந்த அளவுக்கு, வேலை இல்லா திண்டாட்டம் குறைந்து இருப்பது சந்தோஷம் தான். ஆனால் கொரோனா லாக் டவுன் காலத்துக்கு முன்பு, இந்தியாவில் வேலை இல்லா தீண்டாட்டம், 8 சதவிகிதத்துக்கும் கீழ் தான் இருந்தது எனச் சுட்டிக் காட்டி இருக்கிறது CMIE (Centre for Monitoring Indian Economy) என்கிற அமைப்பு.
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் இருந்து இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் நிதானமாக அதிகரித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறது CMIE அமைப்பு. 2017 - 18 நிதி ஆண்டில் சராசரியாக வேலை இல்லா திண்டாட்டம் 4.6 சதவிகிதமாகத் தான் இருந்தது.
ஆனால் அதற்கு அடுத்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 6.3 சதவிகிதமாகவும், 2019 - 20 நிதி ஆண்டில் வேலை இல்லா திண்டாட்டம் 7.6 சதவிகிதமாகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா லாக் டவுன் தளர்த்தப்பட்ட பின்பும், வேலை இல்லா திண்டாட்டம் 11 சதவிகிதமாக இருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வேலை இல்லா திண்டாட்டம் வரவில்லை. அதற்கு பொருளாதாரம் மீள்வதில் இருக்கும் மந்த நிலை தான் காரணம் எனவும் சொல்கிறார்கள்.
எப்போது பொருளாதாரம் மீண்டு வந்து, வேலை இல்லா திண்டாட்டம் குறையும் என்பது எல்லாம் அரசு கையிலும், கொரோனா கையிலும் தான் இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications