கோவை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் கோயம்புத்தூரில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎம்ஆர்எல் லிமிடெட் எனப்படும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் மாநில நெடுஞ்சாலை துறையோடு இணைந்து இந்த மேம்பால திட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இதன்படி கோல்டு வில்ஸில் இருந்து லீ மெரிடியன் ஹோட்டல் வரையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது.
இதில் மேலடுக்கில் மெட்ரோ ரயில்கள் செல்லும் என்றும் கீழடுக்கில் வழக்கம் போல பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போலவே கோயம்புத்தூரிலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம்தான் கோயமுத்தூரிலும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

இதற்கான ஆய்வு பணிகள் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவிநாசி முதல் சத்தியமங்கலம் சாலை வரை என சுமார் 34.8 கிலோமீட்டர் தொலைவிற்கு 32 மெட்ரோ ரயில் நிலையங்களோடு மொத்தம் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தயாராகி வருகிறது. இதில் முதல் கட்டமாக சத்தியமங்கலம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் மாநில தேசிய நெடுஞ்சாலை துறையோடு இணைந்து கோவையில் கோல்டுவின்ஸ் முதல் லீ மெரிடியன் ஹோட்டல் வரையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தின் கீழ் தளத்தில் வழக்கம் போல பொது போக்குவரத்து தொடரும் என்று மேல் தளத்தில் மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டெடுக்கு பாலமாக கட்டுவதால் மெட்ரோ ரயில் பணிகளுக்காக கூடுதலாக நிலம் எதையும் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
கோயம்புத்தூர் வர்த்தக கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்புக்கான பிரிவு பொறியாளர் மனுநீதி இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். தேசிய நெடுஞ்சாலையும் மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமும் இணைந்து பணிகளை மேற்கொள்ள இருப்பதால் இருதரப்புக்குமே கட்டுமான செலவு குறையும் என கூறியுள்ளார்.
மேலும் அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான 10 கிமீ நீளத்திற்கு உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை குறிப்பிட்ட அவர், இது மேலும் 5 கிமீ நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான நிலம் அளவீடு மற்றும் மண் பரிசோதனை பணிகளும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications