இந்தியாவில் மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 1966க்குப் பின் முதன்முறையாக 50 சதவீதத்துக்கும் குறைவாக இறங்கியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாதனை அளவாக 13,699 மெகாவாட்களாக 71 சதவீத மின்சார உற்பத்தியில் பங்கு வகிக்கிறது.

இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜி எக்கனாமிக்ஸ் அண்டு பைனான்சியல் அனாலிசிஸ் அறிக்கைப்படி இந்திய அரசின் இலக்கான 50 சதவீத ஒட்டுமொத்த படிம எரிபொருள் சார்ந்த மூலப் பொருட்கள் மூலம் மின் உற்பத்தித் திறனை 2030க்குள் அடைய வேண்டும் என்பதற்கு முன்பே எட்டியுள்ளது.
ஜி7 நாடுகளின் நிலக்கரி தேவை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. 1900 ஆம் ஆண்டில் இருந்து இல்லாத அளவுக்கு 2023இல் குறைந்தது.
இந்தியாவில் பெரிய அளவு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மையங்கள் 69 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. 2024 நிதியாண்டில் அரசின் இலக்கான 50 கிகாவாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டுக்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து கோவிட் காரணமாக உலகளவில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சப்ளை செயின் பிரச்னை மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் போன்றவைகளும் இதற்கு காரணமாகும்.
இந்தியாவின் மின்சார உற்பத்தித் திறனில் நிலக்கரியின் பங்கு 50 சதவீதத்துக்கும் கீழே 1960 களுக்குப் பின்னர் குறைந்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளில் மிகப் பெரிய மின் தட்டுப்பாடு ஜூனில் ஏற்பட்டது.
இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் பெரிய அளவு சந்தை விரிவாக்கம், மத்திய அரசின் ஆதரவு ஆகும்.
எம்பரின் ஐந்தாவது வருடாந்திர குளோபல் எலக்ட்ரிசிட்டி ரிவியூவில் 80 நாடுகளில், இந்தியா உலகின் சூரிய சக்தி உற்பத்தி தரவரிசையில் சீனா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சோலார் 19 வது ஆண்டாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார ஆதாரமாக இருந்தது. கடந்த ஆண்டு நிலக்கரியை விட இரண்டு மடங்கு புதிய மின்சாரத்தை சேர்த்தது என்று செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
சீனா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பின்னால், 2023 இல் சூரிய மின் உற்பத்தியில் உலகின் நான்காவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. முதல் நான்கு நாடுகள் 2023 ஆம் ஆண்டில் சூரிய சக்தி வளர்ச்சியில் முக்கால்வாசி பங்கைக் கொண்டுள்ளன என்று அது மேலும் கூறியது.
2000 ஆம் ஆண்டிலிருந்து, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியிலிருந்து உலகளாவிய மின்சாரத்தின் பங்கு 19 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது.
மறுபுறம், நிலக்கரியை நம்பியிருப்பதை இந்தியாவால் கைவிட முடியவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாதகமான வானிலை மற்றும் அதிகரித்து வரும் மின்தேவையானது, நாடு தனது மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான நிலக்கரியை தொடர்ந்து நம்பியுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இந்த ஆண்டு நிலைமை மாற வாய்ப்பில்லை, மத்திய மின்சார ஆணையம் நீர்மின்சாரத்தில் பற்றாக்குறையை எதிர்பார்க்கிறது, இது மின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications