பெங்களூரு: பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா இந்தியா, கர்நாடகாவில் மாம்பழ சாகுபடியில் இறங்கியுள்ளது. இதற்காக வேளாண் துறை தீர்வுகளை வழங்கும் கிராம் உன்னாடி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
கர்நாடகாவில் மாம்பழ சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோகோ கோலா இந்தியா நிறுவனம் கிராம் உன்னாடி நிறுவனத்துடன் இணைந்து "ப்ராஜெக்ட் மேங்கோ உன்னாடி" என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் அல்போன்சா மற்றும் டோடாபுரி ரக மாம்பழங்களின் விளைச்சலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவர்கள் செயல்பட உள்ளனர். மாநில தோட்டக்கலை அமைப்பான க்ரிஷ் விக்யான் கேந்திரா, மாம்பழ வாரியம் மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்வேறு மாவட்டத் தோட்டக்கலை துறைகள் ஆகியவற்றோடு நெருக்கமாக இணைந்து இந்த திட்டத்தில் செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம் உன்னாடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான அனீஸ் ஜெயின் இது பற்றி கூறுகையில் இந்த புதுமையான திட்டத்தில் கோகோ கோலா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார். நவீன நடைமுறைகளை பின்பற்றி அதே நேரம் தரத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் கர்நாடகாவில் உள்ள மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
கோகோ கோலா இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மாம்பழ விவசாயத்தில் நிலையான வளர்ச்சியையும் புதுமைகளையும் கொண்டு வருவது தான் எங்களின் நோக்கம் என்றும் இது விவசாயிகளுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல் நமது சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்க கூடிய ஒரு திட்டமாக இருக்கும் என அனீஸ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய ராஜேஷ் அயப்பிள்ளை ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கான மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
"மேங்கோ உன்னாடி" திட்டத்தின் மூலம் மேம்பட்ட தோட்டக்கலை தீர்வுகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றும் இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். நிச்சயமாக இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் எனக் கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு பழத்தோட்டங்கள் மற்றும் அதிக அடர்த்தி கொண்டு தோட்ட நடைமுறைகளுக்கான புதிய தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தின் மூலம் கற்றுத் தருவோம் என்றும் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications