சென்னை: இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களான காக்னிசன்ட் மற்றும் கேப்ஜெமினி 2023ஆம் ஆண்டில் குறைந்த அளவில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் சுமார் 151,607 பணியாளர்கள் குறைவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
காக்னிசன்ட் மற்றும் கேப்ஜெமினி நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனங்களில், சுமார் 400,000 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கின்றனர். 2022ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட காக்னிசன்ட் நிறுவனம் 132,000 புதிய ஊழியர்களைப் பணியமர்த்தியது.

பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி, 2022 ஆம் ஆண்டு மொத்தம் 140,789 பணியாளர்களை நியமித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில், காக்னிசன்ட் தேர்ந்தெடுத்த புதிய பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 60,000 ஆகக் குறைந்தது.
அதேபோல், கேப்ஜெமினி, 2023 ஆம் ஆண்டில், சுமார் 61,182 பேரை வேலைக்கு அமர்த்தியது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் காக்னிசன்டில் 72,000 மற்றும் கேப்ஜெமினியில் 79,607 புதிய பணியாளர்கள் குறைந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து மற்ற IT நிறுவனங்களான, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்களும் புதிய பணியாளர்களைக் குறைவாக நியமித்துள்ளது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 70,000 பணியாளர்களால் குறைந்துள்ளது.
எவரெஸ்ட் குரூப் எனப்படும் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் பீட்டர் பெண்டர் சாமுவேல், "இந்த IT நிறுவனங்கள், தங்கள் அலுவலகங்களில் வேலையை விட்டு வெளியேறும் அதிக எண்ணிக்கையிலான நபர்களை ஈடுகட்ட, கோவிட் காலத்தில் அதிகமான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், IT துறை வேகமாக வளரும் என்றும் எண்ணி ஆட்களை எடுத்ததாகவும், ஆனால் தற்போது, தொழில்துறை சற்று குறைந்துள்ளதால், இந்த நிறுவனங்களில் கிடைக்கும் வேலைகளுக்கு அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். " என்றும் கூறியுள்ளார்.
பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகள் காரணமாக, ஊழியர்கள் தாங்களாகவே வெளியேறும் இயல்பான செயல்முறை, இந்த முன்னணி நிறுவனங்களுக்கு நடக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால், புதிய ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
காக்னிசன்ட் தனது நிறுவனத்தின் செயல்பாட்டை எளிமைப்படுத்தவும், நெறிப்படுத்தவும், பாண்டமிக் காலத்திற்குப் பிறகு, வேலை வாய்ப்புக்கு இடமளிக்கும் வகையில் அலுவலக இடத்தை சரிசெய்யவும், 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒரு திட்டத்தைத் தொடங்கியது. அதற்காக சுமார் $229 மில்லியன் செலவு செய்தது.
காக்னிசன்ட் ஊழியர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில், 7,100 குறைந்து 344,400 ஆக இருந்தது. அதன் பணியாளர்களில் சுமார் 250,000 பேர் இந்தியாவில் உள்ளனர்.
கேப்ஜெமினி ஊழியர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில் 337,200 ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6 % குறைந்துள்ளது.சமீபத்தில் கூகுள் நிறுவனமும் தனது கோர் டீமில் இருக்கும் 200 பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
AI வளர்ச்சியின் காரணமாக புதிய பணியாளர்களை நியமிப்பது குறைந்துள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும், அதிக அளவில் உள்ள ஊழியர்களை குறைக்கவும் இந்நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications