சர்வதேச அளவில் முன்னணி ஐடி சேவை நிறுவனமான Cognizant, தனது மூன்றாவது காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை 3,800 அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பிற ஐடி சேவை நிறுவனங்களை போலவே காக்னிசென்ட் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பாராக்குறியது. ஆனால் இதைவிட முக்கியமான ஒரு விஷயம் நடந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு உடன் முடிந்த ஒரு வருட காலக்கட்டத்தில் Cognizant-ன் மொத்த ஊழியர் எண்ணிக்கை 6,500 குறைந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆகஸ்ட் மாதத்தில் காக்னிசென்ட் கையகப்படுத்திய Belcan-ல் 6,500 ஊழியர்கள் பணியாற்றினர், இவர்களை மொத்தமாக நிறுவனத்தில் சேர்த்த பின்பும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.

Cognizant-ன் CEO ஆக இந்தியரும், முன்னாள் இன்போசிஸ் ஊழியருமான ரவி குமார் பதவியேற்றிய காலத்தில் இருந்து, பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரவி குமார் வருகைக்கு பின்பு இந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளனர்.
முன்பு Cognizant-ஐ விட்டு வெளியேறிய சுமார் 13,000 பேர் மீண்டும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இது நிறுவனம் மற்றும் அதன் வளர்ச்சியின் மீதான நம்பிக்கையில் நடந்த முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும் Cognizant-ல் பணியாளர் பயன்பாட்டு விகிதம் மூன்றாவது காலாண்டில் 84% ஆக அதிகரித்துள்ளது. இதோடு அடித்த ஆண்டில் காக்னிசென்ட் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் அதிகளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் ஊழியர்கள் அட்ரிஷன் விகிதம் 14.6% ஆக உள்ளது, கடந்த 2 காலாண்டை ஒப்பிடுகையில் 150 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தாலும், நிறுவனத்தின் CFO, ஜதின் தலால், இந்த அளவு சிறப்பானதாகவே உள்ளதாக உறுதியளித்தார்.
மூன்றாவது காலாண்டில் டாப் 6 ஐடி சேவை நிறுவனங்களில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 17,500-க்கும் அதிகமாகியுள்ளது. ஆனால் HCL டெக்னாலஜிஸ் நிறுவனம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட State Street-உடனான கூட்டணி வர்த்தகத்தை விற்பனை செய்த காரணத்தால் அதன் அதன் பணியாளர் எண்ணிக்கை 780 பேர் குறைந்துள்ளனர்.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications