காக்னிசென்ட் CEO ரவி குமார் சம்பளம் 50% கட்.. ஐடி ஊழியர்கள் ஷாக்.. உண்மை என்ன தெரியுமா..?

இந்திய ஐடி சேவைத் துறை நிறுவனங்கள் டிரம்ப்-ன் வரி விதிப்பால் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில் டிசிஎஸ், விப்ரோ ஆகியவை தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவிக்கும் தினத்தை முடிவு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதேபோல் அமெரிக்காவின் வரி விதிப்பு நுகர்வோர், ரீடைல், உற்பத்தி, BFSI ஆகிய துறைகளின் வர்த்தகம், வளர்ச்சியைப் பாதிக்கும் காரணத்தால் இத்துறையில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கும். இதனாலேயே சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளது, இதேவேளையில் ஐடி நிறுவனங்களின் சம்பளம் தொடர்ந்து வருவது முக்கிய விவாதமாக உள்ளது.

காக்னிசென்ட் CEO ரவி குமார் சம்பளம் 50% கட்.. ஐடி ஊழியர்கள் ஷாக்.. உண்மை என்ன தெரியுமா..?

உதாரணமாக இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2025ஆம் நிதியாண்டுக்கு ESOP வாயிலாக மட்டுமே 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பெற்றுள்ளார் என இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளில் அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஐடி துறையில் முக்கிய திருப்பமாக காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார் சம்பளம் 50 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கள நிலவரம் வேறு விதமாக உள்ளது. என்ன நடக்கிறது..? ஐடி ஊழியர்கள் கட்டாயம் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ரவி குமார் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்ற நாளிலிருந்து அதிரடியாகச் செயல்பட்டது மூலம் பல பிரிவுகளில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றும், லாபம் , வருவாய் அளவுகளையும் உயர்த்தி காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக நிதியாண்டின் படி 2024ஆம் நிதியாண்டுக்கு ரவி குமார் பெற வேண்டிய 137 கோடி ரூபாய் சம்பளத்தில் வெறும் 70 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்ன கணக்கு இது..? வாங்க பார்ப்போம்.

காக்னிசென்ட் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காரணத்தால் அதன் நிதியியல் முடிகளை அமெரிக்காவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC-யிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் 2024ஆம் நிதியாண்டுக்கு ரவி குமார் 70 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார் என்றும் 2023ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இவருடைய சம்பளம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் 2024 ஆம் நிதியாண்டில் இவர் பெற வேண்டிய 137 கோடி ரூபாய் சம்பளத்தில் 50 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது. ஏன் இந்த வித்தியாசம், என்ன நடக்கிறது..?

  • ரவிகுமாரின் அடிப்படை சம்பளம் 10.25 கோடி ரூபாய், இது கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் அதிகம்.
  • ACI டார்கெட் மூலம் இவருக்கு 20.49 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் அதிகம்
  • பர்பாமென்ஸ் பங்கு யூனிட் பிரிவின் கீழ் 64 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 9 சதவீதம் அதிகம்.
  • கட்டுப்படுத்தப்பட்ட பங்கு யூனிட் பிரிவின் கீழ் 42.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 9 சதவீதம் அதிகம்.

இப்படி இவருக்குக் கிடைக்க வேண்டிய 137 கோடி ரூபாயும் மொத்தமாகக் கிடைத்தாலும் பர்பாமென்ஸ் பங்கு யூனிட் பிரிவின் கீழ் கொடுக்கப்பட்ட 70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இனி வரும் காலத்தில் தான் அவர் எடுக்க முடியும். இதுவும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து நிர்வாகம் கொடுக்கும் டார்கெட்-ஐ பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த தொகையும் கொடுக்கப்படும். இதனால் இந்த 70 கோடி ரூபாய் கணக்கில் வராது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+