புகழ்பெற்ற ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் ரவி குமாருக்கு மத்திய அரசு சார்பாக பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட உள்ளது.
பிரவாசி பாரதிய சம்மான் விருது என்பது சிறந்த வெளிநாடு இந்தியர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஒரு விருதாகும். இந்தியா வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதன்படி நடப்பு ஆண்டு சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி காக்னிசன்ட் நிறுவனத்தை சேர்ந்த தலைமை செயல் அதிகாரி ரவி குமார் நடப்பாண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதினை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி துறையில் அவருடைய பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என அரசு கூறியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படக்கூடிய முக்கியமான விருதாக இது கருதப்படுகிறது.
ரவி குமாருடன் சேர்த்து மொத்தம் 27 பேருக்கு நடப்பாண்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. பிரவாசி பாரதிய சம்மான் விருதினை பொருத்தவரை துணை குடியரசு தலைவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி வழங்கப்படும் பரிந்துரைகளின் பெயரில் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தக் குழுவின் துணைத் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் செயல்படுகிறார்.
அரசியல், சமூக சேவை, கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படக்கூடிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்க கூடிய பிரபாஸ் பாரதிய நிவாஸ் மாநாடு நடத்தப்படுகிறது. ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக தான் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களை தேர்வு செய்து இந்த பிரபாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் கையில் இந்த விருது வழங்கப்படும்.
ரவி குமார் ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒடியா பூர்வீகத்தை கொண்டு ஃபார்ச்சூன் 200 நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய முதல் நபர் என்ற பெருமை ரவி குமாருக்கு உண்டு. ஒடிசா மாநிலத்தின் பேராம்பூரில் பிறந்தவர் ரவி குமார். சிவாஜி பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவர் பின்னர் சேவியர் கல்வி நிறுவனத்தில் எம் பி ஏ படிப்பை முடித்தார்.
பாபா அணு ஆராய்ச்சி ஆய்வு மையத்தி அணு ஆய்வாளராக வேலையை தொடங்கியவர் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 2016 முதல் 2022 வரை பல்வேறு ஐடி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2023 ஆம் ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
Story Written By: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications