இந்திய ஐடி துறையில் பெரும் அமர்க்களம் செய்து வரும் முன்னணி நிறுவனமான காக்னிசென்ட், யாரும் செய்திடாத வகையில் சக போட்டி நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான உயர் அதிகாரிகளை அதிகச் சம்பளத்தில் பணியில் அமர்த்தி வரும் காரணத்தால் பல நிறுவனத்தில் உயர்மட்டம் ஆட்டம் கண்டு உள்ளது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிறுவனத்தின் வளர்ச்சி மீது மட்டுமே அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி தனது பணியைச் செய்து வருகிறார் இதன் சிஇஓ ரவிகுமார். பிற ஐடி நிறுவனங்களைப் போலவே காக்னிசென்ட் நிறுவனமும் பெரு நகரங்களைக் கடந்து சிறு நகரங்களுக்குப் படையெடுத்து வருகிறது.

இந்த நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார், கோயம்புத்தூர் மற்றும் கொச்சி போன்ற டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் ஊழியர்களிடையே பெண்களின் பங்களிப்பு 47-48% ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது இந்திய சராசரி அளவை காட்டிலும் மிகவும் அதிகம். பொறியியல் கல்லூரிகளின் தோற்றம் வியத்தகு முறையில் மாறிவிட்டது என்று குமார் சிஎன்பிசி-டிவி 18 எதிர்காலப் பெண் முன்னோக்கி என்ற முக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார்.
சில நகரங்களில் பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக இருந்தாலும், இந்திய தொழில்நுட்ப சேவைத் துறையில் பாலின இடைவெளி அதாவது gender gap அதிகமாகவே உள்ளது எனவும் ரவி குமார் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஐடி தொழில்துறை அமைப்பான நாஸ்காம் அறிக்கையின்படி இந்திய தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பு வெறும் 36% மட்டுமே உள்ளது என விளக்கியுள்ளது.
வேலை மற்றும் வீட்டிலுள்ள பொறுப்புகளைச் சமநிலைப்படுத்துவதற்குப் பெண்களின் பங்கீடு அதிகமாக இருக்கும் சமுகக் கட்டமைப்பால் பெண் ஐடி ஊழியர்கள் மத்தியிலான பணியில் இருந்தும் வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கார்ப்பரேட் ஏணிப் படிகளில் (பதவிகளில்) பெண்கள் உயர இத்தகைய கட்டமைப்புகளும் தடையாக உள்ளது என்றும் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் தெரிவித்தார்.
பாலின பங்கீட்டில், பெண்களின் பங்கை அதிகரிக்க அல்லது மேம்படுத்த எவ்விதமான சிறப்பு ஆயுதமோ அல்லது கட்டமைப்போ கார்ப்பரேட் உலகில் இல்லை என ரவி குமார் கூறியுள்ளார்.
மாதவிடாய் விடுமுறைகள், மகப்பேறு நன்மைகள் மற்றும் பெண்கள் தங்கள் கர்ப்பத்திற்குப் பிறகு வேலைக்குத் திரும்புவதை அனுமதிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது போன்ற கொள்கைகள் வாயிலாகப் பலம் சேர்க்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் கலர் மாறி 20 வருடங்களுக்கு அதிகமாகியுள்ளது, ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல் CSE, IT, ECE எனப் பல பிரிவுகளின் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் கல்வியில் எவ்விதமான சமரசம் செய்யாததன் விளைவு தான். இதனாலேயே பெரு நகரங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் அலுவலகம் அமைக்கத் தயாராக உள்ளது, இதற்குக் காரணம் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் திறன் படைத்த ஊழியர்கள் இருப்பார்கள் என்பது தான்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications