இந்தியாவில் சுமார் 70 சதவீத ஊழியர்களை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் ஐடி சேவை அளிக்கும் அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் சமீபத்தில் பிரஷ்ஷர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம் வழங்குவதாக எழுந்த கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து இதற்கு ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
காக்னிசன்ட் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பில் 2024 ஆம் ஆண்டு பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு ரூ.2.52 லட்சம் வரையிலான சம்பளம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இணையத்திலும், சமுக வலைத்தளத்திலும் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் காக்னிசென்ட் நிறுவனத்தைச் சுற்றி உருவாக்கியது.

இத்தகைய கடுமையான விமர்சனத்திற்கு முக்கியமான காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த அதே சம்பளத்தை இப்போதும் கொடுப்பது தான், இதோடு ஐடி சேவைத் துறை பொதுவாக 3 லட்சத்திற்கு அதிகமாகத் தான் சம்பளம் வழங்கப்படும், ஆனால் தற்போது 2.52 லட்சம் சம்பளம் என்பது பெரிய குறைப்பாக உள்ளது. இந்த நிலையில் தான் காக்னிசன்ட் இந்த பிரச்சனைகளுக்கும், கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் கொடுத்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரும், அமெரிக்காஸ் பிரிவின் தலைவருமான சூர்யா கும்மாடி கூறுகையில், "சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம் ஊதியத்துடன் கூடிய இந்த வேலைவாய்ப்பு மூன்று ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே, பொறியியல் பட்டதாரிகளுக்கு அல்ல. ஆனால் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.
மறுபுறம், பொறியியல் பட்டதாரிகளுக்கு எங்கள் நிறுவனத்தில் திறன் மற்றும் சர்டிபிகேஷன் பொறுத்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை தொடக்கச் சம்பளம் வழங்கப்படுகிறது. "பொறியியல் பட்டதாரிகளுக்கு நாங்கள் வழங்கும் சம்பளம் ஐடி சேவை பிரிவில் பிற ஐடி சேவை நிறுவனங்களுக்கு போட்டிதன்மை நிறைந்தது" என்றும் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சம்பள உயர்வு: பிரஷ்ஷர்கள் சம்பளம் போலவே காக்னிசென்ட் ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் குறித்த விமர்சனங்களும் கடந்த வாரம் காக்னிசென்ட் சுற்றி எழுந்தது. இதற்கும் சூர்யா கும்மாடி விளக்கம் கொடுத்தார்.
காக்னிசன்ட், தனது ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு 1% மட்டுமே கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சம்பள உயர்வு தனிநபர் செயல்திறன் மற்றும் வர்த்தக போக்குகளை அடிப்படையில் இருக்கும் என தெளிவுபடுத்தினார். நிறுவனத்தில் குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு 1-5% வரம்பில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications