சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான காக்னிசண்ட் தமிழ்நாட்டை விட்டே வெளியேறுகிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது பன்னாட்டு ஐடி கன்சல்டிங் நிறுவனமான காக்னிசண்ட் 1994 ஆம் ஆண்டு குமார் மகாதேவா என்பவரால் சென்னையில் தான் தொடங்கப்பட்டது.
தற்போது இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து சென்னை அலுவலகம் தான் இதன் முக்கிய அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. காக்னிசண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் திடீரென காக்னிசண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

காக்னிசண்ட் நிறுவனத்தின் தமிழ்நாட்டு அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை 81,000இல் இருந்து 71,000ஆக குறைக்கப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது. காக்னிசண்ட் நிறுவனம் தமிழ்நாட்டை விடுத்து புவனேஸ்வர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், இந்தூர் ஆகிய நகரங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறதாம். குறிப்பாக, அந்த நகரங்களில் புதிதாக அதிக ஊழியர்களை வேலைக்கு தேர்வு செய்வதுமே தமிழ்நாட்டில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியாவில் சென்னை அலுவலகம் தான் இதன் முக்கியமான ஒரு மையமாக இருந்தது சென்னைக்கு அடுத்ததாக கோயம்புத்தூர் முக்கியமான ஒரு அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஐடி வேலை வாய்ப்பு தந்த காக்னிசண்ட் நிறுவனம் திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறது. சென்னையில் 8 மில்லியன் சதுரடி பரப்பளவுள்ள அலுவலகத்துடன் செயல்பட்டு வந்த காக்னிசண்ட் தற்போது அதனை 7 மில்லியன் சதுரடியாக குறைத்துவிட்டது. கடந்த ஆண்டில் கூட காக்னிசண்ட் துரைப்பாக்கத்தில் தங்களுக்கு சொந்தமாக இருந்த இடத்தை 612 கோடி ரூபாய்க்கு நிறுவனம் விற்பனை செய்தது.
இந்த சூழலில் நிறுவனம் தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெரிய அளவிலான அலுவலகத்தை அமைத்து வருகிறது காக்னிசண்ட். அங்கே சுமார் 1500 கோடி முதலீட்டில் அலுவலகம் அமைக்க உறுதி தந்துள்ளது.
மொத்தமாக காக்னிசண்ட் நிறுவனத்தில் 3,51,600 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். 2025இல் புதிதாக 14,000 பேருக்கு வேலை தந்திருக்கிறது இந்த நிறுவனம். நடப்பு ஆண்டிலும் இந்த நிறுவனம் சுமார் 25,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு தரப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த வேலைவாய்ப்புகள் இருக்காது என்றே நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
More From GoodReturns

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications

