பெங்களுரு: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பணி நீக்கமும் தலை தூக்கி வருகிறது. அதிலும் சர்வதேச நாடுகளை சார்ந்துள்ள தகவல் தொழில் நுட்ப துறையில், இந்த பணி நீக்கமானது மிக அதிக அளவில் இருந்து வருகிறது.
குறிப்பாக ஐடி துறையினை பொருத்தவரையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளையே சார்ந்துள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் என்பது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், ஐடி துறையானது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளில் ஐடி துறையில் பணி நீக்கம் அதிகரித்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்
அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான காக்ணிசன்ட் அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது குறித்து வெளியான அறிக்கையில், காக்ணிசன்ட் நிறுவனம் அதன் பெஞ்ச் ஊழியர்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பில் இல்லாத ஊழியர்கள்
அதாவது அதன் பெஞ்ச் ஊழியர்களில் தற்போது எந்த திட்டத்திலும் இல்லாதவர்களை பணி நீக்கம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐடி சேவை நிறுவனங்களில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் பில் இல்லாத ஊழியர்களாகத் தான் கருதப்படுகின்றன. ஏனெனில் பெஞ்ச் ஊழியர்களில் ஆதாரம் இல்லா ஊழியர்களாக கருதப்படுகின்றன.
எத்தனை பேர் பணி நீக்கம்
இந்த நிலையில் தான் இந்தியா முழுவதும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை மற்றும் கர்நாடக ஊழியர் சங்கங்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். காக்ணிசன்ட்டின் இந்த நடவடிக்கையால் பல ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்றும் இந்த சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆக காக்ணிசன்ட்டின் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக , யூனியன் சங்கங்கள் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளன.
41 நாள் கழித்து ராஜினாமா
காக்ணிசன்ட்டின் பெஞ்ச் ஊழியர்கள் 41 நாள் கழித்து தங்களது பணிகளை ராஜினாமா செய்ய சொல்வதாக ஏற்கனவே கடந்த சில வாரங்காளாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. காக்ணிசன்ட் நிறுவனம் அமெரிக்காவுடையது என்றாலும், அதன் ஊழியர்களில் பெருபாலானவர்கள் இந்திய ஊழியர்களே. ஆக காக்ணிசண்டின் இந்த அதிரடி நடவடிக்கையினால் அதிகம் பாதிக்கப்பட போவதும் இந்திய ஊழியர்களே.
பணியமர்த்தலும் உண்டு
காக்ணிசன்ட் நிறுவனம் அதன் ஊழியர்களில் பலரை பணி நீக்கம் செய்து வந்தாலும், சில பணிகளுக்கு பணியமர்த்தல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதோடு தொடர்ந்து முதலீட்டினையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது, இது குறிப்பாக ஊழியர்களின் திறனை அதிகரிப்பதற்காக பயன்படும் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications