உலகின் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடங்கிய நிலையில், உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்கள் முதல் கொண்டு சிறு சிறு ஐடி நிறுவனங்கள் வரையில் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வந்தன.
தற்போது 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு வரும் படி அழைத்து வந்தன.
எனினும் தற்போது ஓமிக்ரான் அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் வீட்டில் இருந்து பணிபுரிய கூறி வருகின்றன.
வீட்டில் இருந்து பணி
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், ஊழியர்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு வீட்டில் இருந்தே பணிபுரிய கூறி வருகின்றன. இதற்கிடையில் காக்னிசண்ட் நிறுவனம் அதன் 3 லட்சம் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய கூறியுள்ளது.
பயணங்களை தவிருங்கள்
மேலும் ஊழியர்களை ஏப்ரல் 2022ல், காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவனம், அதன் ஊழியர்களை திரும்ப அழைக்கும். அதுவரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள். ஆக அலுவலக ரீதியிலான பயணத்தினை தவிருங்கள்.
கலப்பின மாதிரி
நிறுவனம் கலப்பின மாதிரியை ஏற்றுக் கொள்ளும். எங்களின் புதிய நிலையான வேலை மாதிரியானது வாரத்தில் மூன்று நாட்காள் அலுவலகத்தில் இருந்தும், இரண்டு நாட்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் இருந்தும் பணிபுரிந்து கொள்ளலாம். இது வாடிக்கையாளர்களின் தேவை, அவர்களின் வணிகத் தேவைகளை பொறுத்து இருக்கும்.
எத்தனை நாட்கள் அலுவலகம்
இதில் சில ஊழியர்கள் இந்த நிலையில் இருந்து வேறுபடலாம். ஊழியர்களுக்கு அவசியம் இருப்பின் அவர்கள் சில நேரங்களில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அலுவலகம் வர வேண்டியிருக்கும். மொத்தத்தில் ஒரு நெகிழ்வான முறையில் பணிபுரிய வேண்டியிருக்கும் என்று காக்னிசன்ட் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மெயில் அறிக்கையில், காக்னிசண்ட்டின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஹம்பரீஸ் தெரிவித்துள்ளார்.
நெகிழ்வான நிலை
மேலும் வாரத்தில் ஒரு நாள் ஆவது அலுவலத்திற்கு திரும்புவது, நம்மில் பெரும்பாலானோருக்கு பெரிய மாற்றமாக இருக்கும். ஹைபிரிட் பணியானது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வான நிலையை அளிக்கும். ஆக நாங்கள் அதற்கேற்ப செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications