இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் எப்போதும் இல்லாத வகையில் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்களைத் தடுக்கும் வகையில் 30 மில்லியன் டாலர் அளவிலான போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேறும் போது நிர்வாகம் இந்த நிகழ்வைத் தடுப்பதற்காக ஊழியர்களைத் தக்கவைக்கும் விதமாகத் தற்காலிகமாக, குறிப்பிட்ட தொகையைப் போனஸ் ஆகக் கொடுத்து சில வருடங்கள் தக்க வைக்க முயற்சி செய்யும். இது ஐடி துறையில் மிகவும் சகஜமான விஷயம் என்றாலும் காக்னிசென்ட் இதுபோன்ற நடவடிக்கையை இதுவரை எடுத்தது இல்லை எனக் கூறப்படுகிறது.
Attrition Rate உயர்வு
2020ஆம் ஆண்டில் இந்திய ஐடி துறையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் ஊழியர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்த அச்சம் அதிகமாக இருந்த காரணத்தால் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் அளவீடு பெரிய அளவில் குறைந்து இருந்தது. ஆனால் காக்னிசென்ட் நிறுவனத்தின் Attrition Rate சக ஐடி நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக இருக்கிறது.
சிறந்த ஊழியர்கள்
காக்னிசென்ட் நிறுவனத்தின் Attrition rate குறைக்க வேண்டும் என்பதற்காக இந்நிறுவனத்தில் பணியாற்றும் சிறந்த ஊழியர்கள் (Top Performers), டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறன் வாய்ந்த ஊழியர்கள் ஆகியோரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக Retention போனஸ் ஆகச் சுமார் 30 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
போனஸ் தொகை
இந்தப் போனஸ் தொகையை ஊழியர்கள் உடனே அனைவருக்கும் அளிக்காமல் பிற நிறுவனங்களில் வேலை வாங்கிய பின்பு காக்னிசென்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என முடிவு செய்தவர்களுக்குக் கொடுக்கக் காக்னிசென்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
19 சதவீதமாக உயர்வு
கொரோனா காலத்தில் எந்த அளவிற்கு ஐடி ஊழியர்களுக்கு வேலை குறித்த பயம் இருந்ததோ, அதே நேரத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவானது. இதனால் காக்னிசென்ட் நிறுவனத்தில் வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் 2020ல் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ப்பு விகிதம் 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள்
குறிப்பாகப் புதிய வேலைவாய்ப்புகளுக்காக நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் அதிகரித்த காரணத்தால் 10 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் காலாண்டில் கூடுதலாக 1 சதவீதம் உயர்வு ஏற்பட்டு வருடாந்திர Attrition Rate அளவீடு 19 சதவீதமாக உயர்ந்தது.
மறுசீரமைப்பு நடவடிக்கை
காக்னிசென்ட் தனது வர்த்தகத்தை டிஜிட்டல் பிரிவுக்கு மாறத் திட்டமிட்டு நிர்வாகம் மற்றும் வர்த்தக முறையில் பல்வேறு மாற்றக்களைச் செய்து மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் காரணத்தால் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற முக்கியக் காரணமாக உள்ளது என லண்டனை சேர்ந்த ஐடி துறை ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சப்ளை - டிமாண்ட் பிரச்சனை
இதேபோல் காக்னிசென்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ராஜேஷ் நம்பியார் கூறுகையில், சந்தையில் தற்போது டிஜிட்டல் திறன் கொண்டு ஊழியர்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தாலும், இப்பிரிவில் மிகவும் குறைவான அளவிலான ஊழியர்கள் மட்டுமே இருக்கும் காரணத்தால் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications