சென்னை: காக்னிசன்ட் பிரஷ்ஷர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த சம்பளத்தை விடவும் குறைவாக வெறும் 2.25 லட்சம் சம்பளம் வழங்கியதால் ஐடி துறையில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதை தொடர்ந்து அடுத்த பெரும் சர்ச்சையாக காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், தனது பணியாளர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வை வெறும் 1% மட்டுமே வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நான்கு மாதங்கள் தாமதமாகச் சம்பள உயர்வை வழங்கியுள்ள இந்த நிறுவனம், வெறும் 1% சம்பள உயர்வு மட்டுமே சம்பள உயர்வைக் கொடுத்திருக்கும் வேளையில் காக்னிசன்ட் ஊழியர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதேபோல் காக்னிசென்ட் அதிகபட்சமாக 5% வரை மட்டுமே சம்பள உயர்வு வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கிய காக்னிசன்ட், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் தகுதியுள்ள ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், சம்பள உயர்வைத் தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலைமை நிலையற்றதாகவும், பணவீக்கம் அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனாலேயே சம்பள உயர்வு குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காக்னிசென்ட் ஊழியர்கள் வெளியிட்ட தரவுகள் படி, 3 ரேட்டிங் பெற்றவர்களுக்கு 1 முதல் 3% வரை, 4 ரேட்டிங் பெற்றவர்களுக்கு 4% மற்றும் 5 ரேட்டிங் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 4.5% முதல் 5% வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நாஸ்டாக்-ல் பட்டியலிடப்பட்ட இந்த காக்னிசென்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுமார் 7% முதல் 11% வரை சம்பள உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறைவான சம்பள உயர்வு அறிவிப்போடு, நேற்றைய பர்ஷ்ஷர்களுக்கான ரூ.2.52 லட்சம் என்ற வருடாந்திர சம்பளம் வழங்கியதற்காக காக்னிசன்ட் ஐடி ஊழியர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளது.
நியூ ஜெர்சி தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 2,54,000 ஊழியர்கள் உள்ளனர், இது மொத்த ஊழியரில் சுமார் 70% பேர் இந்தியாவில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். ஜூன் காலாண்டில் மொத்த ஊழியர் எண்ணிக்கை 8,100 குறைந்து 3,36,300 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஊழியர் எண்ணிக்கை 9,300 குறைந்துள்ளது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications