முன்னணி IT சேவை நிறுவனமான காக்னிசன்ட் இந்த ஆண்டு 20,000 பிரெஷர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும். பணியமர்த்தல் தொடர்பாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரவிக்குமார் கூறுகையில், இந்த ஆண்டு 20,000 பிரெஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், புதிய பணியமர்த்தல் மூலம் நிறுவனம் தன் திறமையை மீட்டெடுத்து சேவை மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிரிவை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது", என்றும் கூறியுள்ளார்.
தற்போது 3 முக்கிய பகுதிகளில் காக்னிசன்ட் கவனம் செலுத்தி வருகிறது. முதலாவதாக பணியமர்த்தல் செயல்முறை, இரண்டாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் செலவுகளைத் திறம்பட நிர்வகிப்பது.

20000 பிரஷர்களை பணியமர்த்துவது குறித்து காக்னிசன்ட் சிஇஓ ரவிக்குமார் கூறியது என்ன?: காக்னிசன்ட் சிஇஓ தற்போது நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையான திட்டங்களில் வேகமாக செயல்பட்டு வருவதாகவும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை குறையாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். நிறுவனத்தில் மேனேஜ்டு சர்வீசஸ் பெரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொடர்ந்து புது திட்டங்களில் பணியாற்ற ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். அதற்காகத்தான் இந்த புதிய பணியமர்த்தல் என்றும் கூறினார்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் தினத்தன்று பேசிய ரவிக்குமார், பணியமர்த்தல் செயல்முறை குறித்து அறிவித்தார். முதலீட்டாளர் தினம் என்பது ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், ஆய்வாளர்கள், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் ஆகியோருடன் எதிர்காலத் திட்டங்கள், நிறுவனத்தின் நிதிநிலை எப்படி இருக்கிறது? வளர்ச்சி உத்திகள் போன்ற அனைத்தையும் கலந்தாலோசிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு.
அதன் போது தான் 20,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவது குறித்து ரவிக்குமார் கூறினார். எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நிறுவனத்தின் வளர்ச்சியை நிலை நிறுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே காக்னிசன்ட் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 1400-க்கும் மேற்பட்ட ஜெனரேட்டிவ் AI பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. ஜெனரேட்டிவ் AI என்பது கன்டென்ட், இமேஜ், வீடியோ போன்றவற்றை உருவாக்கும் திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம். கூடுதலாக 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 7.45 சதவீதம் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications