அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசன்ட் உயர் நிர்வாக பதவிகளில் இந்தியர்களையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை அடுத்தடுத்து நியமிப்பதன் மூலம் மீண்டும் இந்திய மயமாகிறது.
சென்னையில் துவங்கப்பட்ட காக்னிசென்ட், அமெரிக்காவுக்கு தலைமையகத்தை மாற்றிய பின்பு நீண்ட காலமாக உயர் மட்ட அதிகாரத்தில் இந்தியர்கள் தான் அதிகமாக இருந்தனர். ஆனால் கடந்த சில வருடத்தில் வேகமான வளர்ச்சிக்கும், வெளிநாடுகளில் அதிகம் வளர்ச்சி அடையவும் அதிகப்படியாக வெளிநாட்டவர்களை நியமித்தனர்.

ஆனால் இது பெரிய அளவில் பலன் அளிக்காத நிலையில் Cognizant நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பதவி காலம் முடிய முடிய இந்தியர்களை நியமிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரவிக்குமார்-ஐ தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற போது இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
இந்த ஒரு தலைமை மாற்றம் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ-வில் இருந்து பல முக்கிய நபர்களை முக்கிய பதவிகளில் அடுத்தடுத்து இந்தியர்களாக நியமிக்கும் பணிகள் வெற்றிகரமாக துவங்கியது.
இதில் சமீபத்திய நியமனம் காக்னிசென்ட் நிறுவனத்தின் புதிய சிஎஃப்ஓ-வாகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் விப்ரோ CFO அதிகாரியான ஜதின் தலால் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம் மூலம் மூத்த பணியாளர்களின் நியமனத்தில் புதிய புத்துணர்ச்சியை கொடுத்தது.
இன்போசிஸ்-ன் முன்னாள் EVP மற்றும் கிளவுட் தலைவரான நரசிம்ம ராவ் மன்னேபள்ளி, உலகளாவிய டெலிவரி தலைவராக காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர உள்ளதாகக் கூறப்படுகிறது. காக்னிசென்ட்-ன் முன்னாள் EVP மற்றும் உலகளாவிய விநியோகத் தலைவரான ஆண்டி ஸ்டாஃபோர்ட் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
இவரோடு இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையின் மூத்த துணைத் தலைவராக இருந்த நாகேஸ்வர் செருகுபள்ளி விரைவில் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் விப்ரோ நிறுனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் விப்ரோவின் அமெரிக்க ஹெல்த்கேர் மற்றும் மருத்துவ சாதனங்களின் தலைவரான முகமட் ஹக், காக்னிசண்டில் லைஃப் சயின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காக்னிசென்ட் கடந்த 5 வருடத்தில் இழந்த வேகத்தை மீண்டும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்போசிஸ், விப்ரோ நிறுவனத்தில் இருந்து மூத்த அதிகாரிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது.
காக்னிசென்ட் நிறுவனத்தில் தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பாக இருந்த அஜ்மல் நூரானி, இப்போது தொழில்நுட்பப் பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய இடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் 30 வருடம் அனுபவமுள்ள அனுராக் வர்தன் சின்ஹா தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தின் உயர் துணை தலைவர்மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ஊடக நடைமுறைகளின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications