தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் 2ஆம் தர நகரங்கள் பட்டியலில் கோயம்புத்தூர் முதன்மையாக இருப்பது மட்டும் அல்லாமல் ஐடி நிறுவனங்களையும், ஐடி முதலீடுகளையும் ஈர்ப்பதிலும் கோவை முன்னோடியாக இருக்கிறது.
கோயம்புத்தூர் நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அடுத்தடுத்து அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. கோவையில் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையின் வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் இந்நகரத்தில் சுமார் 7 ஐடி பார்க்குகள் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதன் மூலம் கோவை நகரத்தில் மட்டும் சுமார் 34.37 லட்சம் சதுரடி பரப்பளவிலான ஐடி அலுவலக இடங்கள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகப்படியான ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் அக்சென்சர், இன்போசிஸ் கோவையில் புதிய அலுவலகத்தை திறக்க உள்ளது.
Accenture: தமிழ்நாடு அரசின் ELCOT ஐடி பார்க் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் அக்சென்சர் சுமார் 3 தளங்களில் மெகா அலுவலகத்தை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Infosys: இதேபோல் கோயம்புத்தூரில் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள SVB டெக் பார்க்கில் சுமார் 5 தளத்தில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது அலுவலகத்தை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடி உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் ELCOT கோயம்புத்தூரில் புதிய மற்றும் அதிநவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஐடி டவர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூரில் 2வது IT பார்க் திறப்பதற்கு தயாராக உள்ளது, இது சுமார் 2.66 லட்சம் சதுரடியில் சுமார் 114.16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இதேவேளையில் வேளையில் ELCOT 3வதாக மாபெரும் ஐடி பார்க் கட்டும் திட்டத்தை முன்வைத்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐடி டவர் கோயம்புத்தூர் ELCOT PARK-ல் சுமார் 1 மில்லியன் சதுரடி அதாவது 10 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சென்னை, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் 6.15 லட்சம் சதுரடியில் IT பார்க் அதாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ELCOT அதாவது எலக்ட்ரானிக் கார்ப்ரேஷன் ஆப் தமிழ்நாடு நிறுவனம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 1,288 ஏக்கரில் புதிய தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications