கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையமாக மாறி வருகிறது, குறிப்பாக மத்திய தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளை இணைக்கும் முக்கிய முணையமாக வளர்ந்து வருகிறது. கடந்த 5 வருடத்தில் கோயம்புத்தூரில் இருந்து கோயம்புத்தூரில் இருந்து பல நாடுகளுக்கு நேரடி சேவையை துவங்கப்பட்டு உள்ளது. இதற்கு மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
2024ல் மட்டும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். 2025இல் 35 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோவை விமான நிலையத்தின் பயணிகள் தற்போதைய திறன் 20 லட்சம் மட்டுமே என்பதால், விமான சேவை விரிவாக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளது.

இதனாலேயே கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பல நேரம் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார் வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் விமான நிலைய ஆணையம் (AAI) புதிய இன்டிகிரேட்டட் டெர்மினல் கட்டுமானத்திற்கான கன்சல்டென்சி சேவை வழங்க விருப்பமுள்ள நிறுவனங்களை ஏலத்தில் பங்கேற்க அழைத்துள்ளதாக சென்னை அப்டேட்ஸ் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் முதல் முக்கிய படியாகும்.
புதிய டெர்மினல்:
புதிய இன்டிகிரேட்டட் டெர்மினல் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும், இது தற்போதைய 18,000 சதுர மீட்டர் டெர்மினலின் நான்கு மடங்கு பெரியது. இந்த விரிவாக்கம் மூலம் கோவை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 12 மில்லியன் பயணிகளை (1.2 கோடி) கையாளும் திறன் கொண்டதாக மாறும்.
இந்த விரிவாக்கம் கோயம்புத்தூர் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். இந்த விரிவாக்கத்தில் 8 ஏரோபிரிஜ்கள், கோட் E மற்றும் கோட் C விமானங்களுக்கான 7/14 அப்ரான்கள், ஐசோலேஷன் பே ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இவை விமானங்கள் விரைவான டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் சேவை கிடைக்கும்.

உள்கட்டமைப்பு மேம்பாடுகள்:
இதோடு டெர்மினலுக்கு elevated approach road கட்டப்படும், இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும். மல்டி லெவல் கார் பார்க்கிங் 1600 வாகனங்களுக்கு, 300 வாகனங்களுக்கு சர்பேஸ் பார்க்கிங், பஸ் டெர்மினல் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இவை அனைத்தும் பயணிகளின் வசதியை அதிகரிக்கும். இதோடு பார்லெல் டாக்ஸிவே அமைக்கப்பட உள்ளது, இது விமானங்கள் ரன்வேவை சுற்றி வேகமாக நகர உதவும்.
கோயம்புத்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய விமான நிலையமாக உள்ளது. இந்த விரிவாக்கம் புதிய விமானங்கள், சர்வதேச இணைப்புகளை அதிகரிக்கும். தொழில் மற்றும் சுற்றுலா துறைகளுக்கு பெரும் பயன் அளிக்கும் வரையில் இருக்கும்.
தற்போது கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 627 ஏக்கரில் 605 ஏக்கர் நிலம் அரசு வழங்கியுள்ளது, மீதம் சர்வே நடத்தப்பட்டு வருகிறது. 16 கி.மீ. சுற்றுப்புற சுவர் கட்டும் திட்டம் 2026 செப்டம்பர் முடியும். இது கோயம்புத்தூர் பொருளாதாரத்திற்கு கட்டாயம் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications