தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. முன்னனி ஐடி நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தி ஆலைகள் ஆகியவை கோவை , மதுரை உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வருகின்றன.
வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் உற்பத்தி பெருகுவதால் இந்த நகரங்களில் மக்கள் தொகையும் பெருகி வருகிறது. எனவே சென்னையை போலவே இந்த நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மத்திய அரசு இந்த இரண்டு திட்டங்களையும் நிராகரித்து அறிக்கைகளை திருப்பி அனுப்பியது.
20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் என்ற காரணத்தினால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் எப்படி மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு அப்போதே கேள்வி எழுப்பியது.

ஆனால் மத்திய நிராகரிப்போடு இந்த திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவில்லை. தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என குறிப்பிட்டார். இத்திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று நிதியமைச்சர் கூறினார்.
தமிழ்நாடு அரசு கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான திருத்தப்பட்ட திட்ட ஆய்வு அறிக்கையை மீண்டும் தயாரித்து வருகிறது. விரைவில் இதனை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க இருக்கிறது. முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் கோவை,மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் கைவிடப்படவில்லை மீண்டும் மத்திய அரசிடம் அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறுவோம் என தெரிவித்திருந்தது. நிதி அமைச்சரும் தற்போது இடைக்கால பட்ஜெட்டில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications