அசத்தும் கோயம்புத்தூர் Putchi.. ரூ.60000 முதலீட்டில் ரூ.5 கோடி வருமானம்..! #Textile

பெரும்பாலும், ஒரு தொழிலின் வெற்றி அல்லது தோல்விக்கான காரணம் அது தொடங்கப்பட்ட தருணங்களைப் பொறுத்து அமையும். நீங்கள் எப்போது உங்கள் தொழிலைத் தொடங்குகிறீர்கள், அந்த நேரத்தில் சந்தை எப்படி இருக்கிறது, நீங்கள் எதை விற்கிறீர்கள், மக்கள் அதை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதெல்லாம் மிகவும் முக்கியம் ஆகும்.

இவை அனைத்தும் சரியாக ஒன்றுகூடி வந்தால், நீங்கள் பெரிய வெற்றியை அடைவீர்கள். தீபிகா தியாகராஜனுக்கும் அவரது கணவர் தியாகராஜனுக்கும் இப்படித்தான் நடந்தது. அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்கும் அவர்களின் கனவை நனவாக்க இது அவர்களுக்கு உதவியது.

அசத்தும் கோயம்புத்தூர் Putchi.. ரூ.60000 முதலீட்டில் ரூ.5 கோடி வருமானம்..! #Textile

தியாகராஜனின் வேலை காரணமாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த தம்பதிகள், கோவிட் தொற்றுநோய்க்கு சற்று முன்பு இந்தியாவுக்குத் திரும்பினர்.

கோயம்புத்தூரில் ரூ.60,000 முதலீட்டில் டி2சி மகப்பேறு பிராண்டை 'புட்சி' என்ற பெயரில் தொடங்கினார்கள். வெறும் மூன்றே ஆண்டுகளில், அவர்கள் அதை ஒரு வெற்றிகரமான பிராண்டாக உருவாக்கினர். மகப்பேறு மற்றும் குழந்தைக்கு உணவளிக்கும் ஆடைகளில் (feeding dresses) தொடங்கி, புட்சி இப்போது பல ஆடைகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.

அவர்களின் பிரபலமான தயாரிப்புகளில் மகப்பேறு கால ஆடைகள், பாலூடும் வசதியுள்ள குர்தாக்கள், குழந்தைக்கு தேவையான பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள், மகப்பேறு சானிட்டரி பேட்கள், தாய் மற்றும் குழந்தைக்கான ட்வின்னிங் காம்போஸ், நர்சிங் பொருட்கள், பீரியட் கேர் பொருட்கள், நெருக்கமான உடைகள், பம்ப் சப்போர்ட் பேண்ட்கள், நர்சிங் ப்ராக்கள் மற்றும் நர்சிங் நட்பு கஃப்தான்கள் அடங்கும்.

தீபிகாவும் அவரது கணவரும் தொடங்கிய புட்சி இப்போது 30 பணியாளர்களைக் கொண்ட குழுவாக உள்ளது. இதுக்குறித்து தீபிகா கூறுகையில், மார்ச் 9, 2020 அன்று 10 ஃபீடிங் டிரஸ்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாங்கள் தொடங்கினோம். அதற்கு கிடைத்த வரவேற்பு ஆச்சரியமாக இருந்தது, உண்மையில் அது தான் எங்கள் நம்பிக்கையை அதிகரித்தது என்று கூறுகிறார்.

அதன் பின்னர் 2 வாரங்களில் லாக்டவுன் வந்தது, இருந்தபோதிலும், மூன்று மாதங்களுக்குள் புட்சிக்காக ஒரு முழு அளவிலான ஷாப்ஃபை வலைத்தளத்தைத் தொடங்கினோம். Putchi Maternity Solutions நிறுவனம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.

தீபிகாவின் கணவர் தியாகராஜன், பிடெக் பட்டதாரி மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ பட்டம் பெற்றவர். இவர் ஆஸ்திரேலியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 2019 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோய்க்கு சற்று முன்பு, தம்பதியினர் இந்தியாவுக்குத் திரும்பினர்.

தனது கர்ப்ப காலத்தில், தீபிகா வசதியான மகப்பேறு ஆடைகளை அணிவதற்காக மிகவும் மெனக்கெட்டார், அதில் அதிகப்படியான சவால்களையும் எதிர்கொண்டார். ஆஸ்திரேலியாவில் நல்ல வருமானம் இருந்தபோதிலும், இந்தியாவில் சொந்த முயற்சியைத் தொடங்க ஆர்வமாக இருந்தோம். ஆனால் எங்கள் இருவருக்கும் பிசினஸ் பின்னணி இல்லாததால் கொஞ்சம் பயமாக இருந்தது என்கிறார் தீபிகா.

அவரது கர்ப்ப காலம் முழுவதும், வசதியான மகப்பேறு ஆடைகளைக் கண்டுபிடிக்க அவர் போராடினார். பெரும்பாலான பிராண்டுகள் அவரது தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. சந்தையானது மகப்பேறு உடைகளை விட குழந்தை தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்துவதை அவர் கவனித்தார். அவரது மகன் அபிமன்யு பிறந்த பின் தீபிகா ஒரு தொழிலதிபராக ஆகும் எண்ணம் வலுத்தது.

அவரது யோசனையை தியாகராஜன் ஒப்புக்கொண்டவுடன், தீபிகாவும் தியாகராஜனும் மகப்பேறு உடைகளை தயாரிக்க முடிவு செய்தனர். கோவையில் உள்ள உள்ளூர் கடைகளில் துணி வாங்கினர்.

தீபிகா, தனது தேவையை மனதில் கொண்டு, ஆடைகளை தானே வடிவமைத்து, முதல் 10 பால் புகட்டும் ஆடைகளை தைக்க உள்ளூர் யூனிட் மூலம் பணியாற்றினார்.

மகனின் செல்லப்பெயரான புட்சியை தங்களது பிராண்டுக்கும் பெயரிட்டனர். கொரிய மொழியில் புட்சி என்றால் வாழ்வின் ஆற்றல் என்று அர்த்தமாம். அடுத்த மூன்று மாதங்களுக்கு, தீபிகா துணிகளை வாங்குதல், டிசைனிங் செய்தல், சொந்தமாக உற்பத்தி செய்யும் யூனிட்டை அமைப்பதற்கு முன் உள்ளூரில் துணிகளை தைத்து வாங்குதல் ஆகியவற்றை தொடர்ந்தார்.

பிராண்ட் வளர்ந்தது, தீபிகா ஒவ்வொரு வாரமும் ஏழு புதிய ஆடைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினார். முக்கியமாக மகப்பேறு மற்றும் உணவளிக்கும் ஆடைகளில் கவனம் செலுத்தினார்.

தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, புட்சி மகப்பேறு ஆடைகள் தயாரப்பில் ஒரு முக்கிய பிராண்டாக வளர்ந்தது.
பிராண்டின் உள் குழு தயாரிப்புகளை வடிவமைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆரம்ப மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் இறுதி உற்பத்தி செயல்முறைகளுக்கு நான்கு தனித்தனி அவுட்சோர்ஸ் உற்பத்தி அலகுகளுக்கு அனுப்புதல் ஆகியவற்றின் பொறுப்பாகக் கொண்டிருந்தது.

தற்போது 32 வயதாகும் தீபிகா, தமிழ்நாட்டில் உள்ள கோபிசெட்டிபாளையம் என்ற ஊரில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. 2009 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீ வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியலில் 12 ஆம் வகுப்பை முடித்தார்.

அதன்பிறகு, கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து, பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து, 2012 இல் பட்டப்படிப்பை முடித்தார்.
பட்டப்படிப்பை முடித்த தீபிகா சென்னையில் உள்ள தமிழ் செய்தி சேனலில் சேர்ந்தார். 2012 முதல் 2014 வரை, அவர் அங்கு ஒரு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றினார்.

2014 ஆம் ஆண்டில், அவர் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு புகைப்பட நிறுவனமான ஸ்டுடியோ ஏ-யின் செயல்பாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு தீபிகா தனது தொழிலில் இருந்து ஓய்வு எடுத்து திருமணம் செய்து கொண்டார்.

2017 ஆம் ஆண்டில், அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு இடம்பெயர்ந்தார். 2019 வரை ஸ்டுடியோ A இல் பணியாற்றினார்.
புட்சி அறிமுகப்படுத்தப்பட்டதன் பிறகு, ஆகஸ்ட் 2023 வரை, பிராண்ட் அதன் வலைத்தளத்தின் மூலம் அதன் சொந்த தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்வதில் கவனம் செலுத்தியது.

ஆனால் ஆகஸ்ட் 2023 முதல், தீபிகா புட்சியின் இணையதளத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்க சுமார் 100 இந்திய அம்மா-குழந்தை பிராண்டுகளை கொண்டு வந்தார்.

இவற்றில், 90 சிறிய அளவிலான பிராண்டுகள் தாய்மார்களால் வழிநடத்தப்படுகின்றன. அவை அவற்றின் சொந்த வலைத்தளங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் அல்லது தொழில்நுட்ப ஆதரவு இல்லாதவை. புச்சி அவர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான தளமாக மாறியுள்ளது.

புட்சியின் தளத்தில் ஆர்டர்கள் செய்யப்படும்போது, அவை அந்தந்த பிராண்டுகளுக்கு அனுப்பப்பட்டு, டெலிவரிக்கு டிராப் ஷிப்பிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. புட்சி இந்த உள்நாட்டு பிராண்டுகளின் விற்பனையில் 20-30% கமிஷன் பெறுகிறது.

புட்சி அதன் தயாரிப்புகளை விற்க மூன்று வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளது. முதலில் கோயம்புத்தூர் பீளமேட்டில் 500 சதுர அடியில் வாடகைக்கு புச்சி பொருட்களை பிரத்யேகமாக காட்சிக்கு வைத்துள்ளனர். ஆனால் அவர்களின் விற்பனையில் பெரும்பாலானவை அவர்களின் வலைத்தளத்திலிருந்து வருகின்றன. தீபிகா சமீபகாலமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்களை விற்பனை பங்குதாரர்களாக இணைத்துக்கொண்டுள்ளார்.

இந்தக் குழுவில் சுமார் 275 பெண்கள் உள்ளனர், அவர்களில் பலர் வீட்டு வேலை செய்பவர்கள், தொழில் இடைவேளையில் இருப்பவர்கள் அல்லது நிதி சுதந்திரத்தை நாடுபவர்கள். வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் புட்சி தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி விற்பனை செய்து, ஒவ்வொரு விற்பனையிலிருந்தும் கமிஷனைப் பெறுகிறார்கள். இந்த பெண்களை தனது பிராண்ட் அம்பாசிடர்கள் என்று தீபிகா வர்ணிக்கிறார்.

கோயம்புத்தூர் பீளமேட்டில் புட்சி 1000 சதுர அடியில் கிடங்கு உள்ளது. அங்கு அவர்கள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். அமேசான், ப்ளூ டார்ட் மற்றும் டெல்லிவரி ஆகியவை அவர்களின் ஷிப்பிங் பங்குதாரர்கள் ஆவர்.

அவர்களின் விற்பனையில் சுமார் 95%, ஆன்லைனில் இருந்து வருகின்றன. அதே நேரத்தில் மீதமுள்ள 5% அவர்களின் கடையின் வணிகத்தில் சுமார் 90% இந்தியாவுக்குள் இருந்து வருகிறது. மீதமுள்ளவற்றில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பங்களிக்கின்றன.

மொத்தத்தில், அவர்கள் 900 க்கும் மேற்பட்ட ஸ்டைலில் ஆடைகளை வழங்குகிறார்கள், அவற்றில் 40% புட்சியின் சொந்த தயாரிப்புகள். மீதமுள்ள 60% பல்வேறு பிற பிராண்டுகளிலிருந்து வந்தவை.

சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது, கோயம்புத்தூர், அடுக்கு-2 நகரத்தில் சரியான நேரத்தில் பிக்அப் மற்றும் டெலிவரிகளை நிர்வகிப்பது சவாலாக இருக்கிறது. மேலாண்மை மற்றும் வணிக மேம்பாட்டு பாத்திரங்களுக்கு பணியமர்த்துவது ஒரு சவாலாக உள்ளது.

மன ஓய்வெுக்காக, தீபிகா சமைப்பதில் கழிக்கிறார். அத்துடன் தனது 4 வயது மகன் அபிமன்யுவுடன் பொழுதை கழிக்க விரும்புகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+