'தள்ளுவண்டி'யில் உருவான 800 கோடி ரூபாய் பிஸ்னஸ்.. கோயம்புத்தூரின் முக்கிய அடையாளம்..!

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி விற்பனையில் மாபெரும் ரீடைல் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது KPN Farm Fresh, இந்த பெயர் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கோவை பழமுதிர் நிலையம் கடை உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். கோவை பழமுதிர் நிலையம் பிராண்டின் தாய் நிறுவனம் தான் KPN Farm Fresh.

கோவை பழமுதிர் நிலையம் குறித்து இப்போது பேச முக்கியமான காரணம் உண்டு. இந்திய நிறுவனங்கள் புதிய முதலீடுகளை பெற முடியாமல் தவித்து வரும் வேளையில் இந்த நிறுவனம் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான WestBridge Capital-யிடம் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 550 முதல் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதைக்கு மாபெரும் முதலீட்டை திரட்டியுள்ளது.

தள்ளுவண்டியில் உருவான 800 கோடி ரூபாய் பிஸ்னஸ்.. கோயம்புத்தூரின் முக்கிய அடையாளம்..!

ஒரு குடும்ப நிர்வாகத்தில் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடியும், இதிலும் குறிப்பாக அடிமட்டத்தில் இருந்து வர்த்தகத்தை துவங்கினாலும் இது சாத்தியம் என்பதை காட்டியுள்ளது கோவை பழமுதிர் நிலையம் பிராண்டின் ஆர் நட்ராஜன் குடும்பம்.

தமிழ்நாட்டில் மட்டும் கொடிக்கட்டி பறந்து வரும் கோவை பழமுதிர் நிலையம் இந்த 600 கோடி ரூபாய் புதிய முதலீட்டின் மூலம் தென்னிந்தியாவின் பிற 4 மாநிலத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளது. தமிழ்நாட்டின் இந்த மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் துவக்க புள்ளி எங்கு தெரியுமா, சாலையோர தள்ளுவண்டி கடை

தள்ளுவண்டியில் உருவான 800 கோடி ரூபாய் பிஸ்னஸ்.. கோயம்புத்தூரின் முக்கிய அடையாளம்..!

1965ல் கோவை பழமுதிர் நிலையத்தின் நிறுவனரான ஆர் நட்ராஜன் அவர்களும், அவருடைய மூத்த சகோதர் இருவரும் தந்தையின் மறைவின் காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, பசியை தீர்க்க சம்பாதிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இப்போது 300 ரூபாய் முதலீட்டில் தள்ளுவண்டியில் பழமுதிர் நிலையம் என்ற பெயரில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பழங்களை விற்பனை செய்ய துவங்கினர், கோயம்புத்தூரில் முதல் முறையாக பழங்களை டஜன் கணக்கில் விற்பதை மாற்றி கிலோ கணக்கில் விற்பனை செய்தனர்.

கிலோ கணக்கிலும், நியாயமான விலையிலும் பழங்களை விற்பனை செய்யப்பட்டதால் இது மக்கள் மத்தியில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து, இதை தொடர்ந்து பழ வியாபாரம் மந்தமடையும் போது ஜூஸ் விற்பனையில் இறங்கினர். கோவை பழமுதிர் நிலையத்தின் ஜூஸ்-ல் தண்ணீர் கலக்காமல் மக்களுக்கு கொடுப்பது தான் ஸ்பெஷல்.

தள்ளுவண்டியில் உருவான 800 கோடி ரூபாய் பிஸ்னஸ்.. கோயம்புத்தூரின் முக்கிய அடையாளம்..!

இப்படி வர்த்தகம் படிப்படியாக வளர்ச்சி அடைந்த நிலையில், 2012ல் KPN Farm Fresh என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு இன்னும் வேகமாக பல பிரிவுகளில் பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருடத்திற்கு 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டு லாபகரமாக உள்ளது KPN Farm Fresh எனப்படும் கோவை பழமுதிர் நிலையம்.

KPN Farm Fresh நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகள் WestBridge Capital கைப்பற்றினாலும், 30 சதவீத பங்குகள் இன்னும் ஆர் நட்ராஜன் குடும்பத்திடம் தான் உள்ளது. இது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் நிர்வாகம், சிஇஓ பதவி அனைத்தும் தற்போதைய தலைவரான செந்தில் நட்ராஜனிடம் தான் இருக்க போகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+