கோயம்புத்தூர்: கொரோனா காலத்தில், யாரிடமும் போதிய அளவு காசு இல்லை. போதிய அளவுக்கு பணம் வந்தாலும், செலவுகள் ஏதாவது ஒரு பக்கம் அதிகரித்து விடுகின்றன.
இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்கவே முடியாமல், மக்கள் ஒரு பக்கம் வாழ்கையோடு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில், கோவையில் ஒரு நபர், மதுபானங்களை வாங்கி குடிக்க காசு இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக ஏடிஎம் இயந்திரத்தில் கை வைத்து இருக்கிறார்.
கோயம்புத்தூரில் சம்பவம்
தொழில் நகரமான கோவையில், ஆர் எஸ் புரத்தைச் சேர்ந்த, 42 வயது நிரம்பிய விஜய குமார் என்பவர், முன்பு ஒரு தங்க பட்டறை (Gold Smithery) வைத்திருந்தார். தொழிலில் எதிர்பார்த்த படி போகவில்லை. தொழிலில் நஷ்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கடைசியில் வியாபாரம் மொத்தமும் காலியாகி நஷ்டம் தான் மிஞ்சியது.
குடி பழக்கம்
கடை நஷ்டமான பின், விஜய குமார் மெல்ல குடி பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். அதோடு எந்த வேலைக்கும் போகாமல் இருந்து இருக்கிறார். கடந்த 03 ஜூலை 2020, வெள்ளிக்கிழமை இரவு, தன் மனைவி இடம் குடிக்க பணம் கேட்டு இருக்கிறார். விஜய குமாரின் மனைவி பணம் தர மறுத்து இருக்கிறார்.
ஏடிஎம் பிரவேசம்
எனவே, விஜய குமார், தன் மனைவியின் டெபிட் கார்டை திருடிக் கொண்டு வந்துவிட்டார். பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் பல முறை பணம் எடுக்க முயல்கிறார். அதன் பின் தான் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பது தெரிய வந்து இருக்கிறது. எனவே ஏடிஎம் இயந்திரத்துக்குள் இருக்கும் பண டிரேக்களை எடுக்க, முயற்சித்து இருக்கிறார்.
காவலர்களுக்கு தகவல்
ஆனால் முடியவில்லை. விஜய் குமார் திறக்க முயற்சித்து, ஏடிஎம் ஸ்குரூக்களை எல்லாம் நீக்கி இருக்கிறார். அதையும் அப்படியே விட்டுச் சென்றுவிட்டார். அதன் பின் வந்து பார்த்தவர்கள் ஏதோ ஏடிஎம்-ல் பிரச்சனை இருப்பதைப் உணர்ந்து கொண்டு, காவலர்களுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
சிசிடிவி
ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தி இருந்த சிசிடிவி வீடியோக்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அதன் பின் விஜய குமார் தேடிப் பிடித்து இருக்கிறார்கள். விசாரணையின் போது தான், மது குடிக்க, ஏடிஎம்-ல் இருந்து பணத்தை திருட முயற்சித்த்தாகச் சொல்லி இருக்கிறார். தற்போது விஜயகுமாரை judicial custody-ல் ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications