தமிழ்நாடு அரசு இடைக்கால பட்ஜெட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின்போது கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட பல திட்டங்களை அறிவித்தார்.

நவீன நூலகங்கள்
கோயம்புத்தூர் இளைஞர்கள், மாணவர்களுக்கான கல்வி மற்றும் புதுமைகள் குறித்த அறிவு அணுகலை விரிவாக்கும் நோக்கில் கோயம்புத்தூர் உட்பட திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.902 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தரமான கல்வியும், கவ்வி வாய்ப்புகளையும் எளிதில் கிடைக்கச் செய்யும் இத்திட்டம் ஏற்கனவே கல்வி நகரமாக இருக்கும் கோயம்புத்தூரின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு மையங்கள்
சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு மையங்கள் (Centers of Excellence) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவும். கோயம்புத்தூரின் தொழில்துறை வளர்ச்சிக்கு இணைந்து இளைஞர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப பயிற்சி கிடைக்கும்.
கோயம்புத்தூர் தங்க நகை பூங்கா
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்க நகை பூங்கா (Gold Jewellery Park) அமைக்கும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் ரூ.81 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன. இது கோவை நகைத் தொழிலை மேம்படுத்தி உள்ளூர் வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரும் வாய்ப்பை உருவாக்கும். கோயம்புத்தூரின் பாரம்பரிய நகைத் தொழிலுக்கு புதிய உயிர் கொடுக்கும் திட்டமாக இது திகழும்.
செம்மொழி பூங்கா
கோயம்புத்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா ரூ.208 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கோவை நகர்புற வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
உலகளாவிய திறன் மையங்கள்
சென்னையில் 250-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) செயல்படும் நிலையில், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களும் இத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இது கோயம்புத்தூரை IT மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்துக்கு
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்பியுள்ளது. இந்நகர மக்கள்தொகை 20 லட்சத்துக்கு குறைவாக உள்ளது என்ற காரணத்தை முன்வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒப்புதல் கோரி வருகிறது. கோயம்புத்தூர் போக்குவரத்து சிக்கலைத் தீர்க்கும் முக்கிய திட்டமாக இது உள்ளதால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முக்கியதுவம் அளித்து வருகிறது.
டெக்ஸ்டைல் தரச் சோதனை ஆய்வகம்
டெக்ஸ்டைல் தொழிலில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (SITRA) ரூ.6 கோடி செலவில் மேம்பட்ட தரச் சோதனை ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. sports textiles போன்ற ஜவுளிகளின் தரத்தை உயர்த்தி உலக சந்தையில் போட்டியிடவும் இது உதவும்.
பயங்கரவாத எதிர்ப்புப் படை
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் மூன்று பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.
கோயம்புத்தூர் மாவட்டம் தொழில், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் முன்னணி மாவட்டமாக உருவெடுத்து வருகிறது. இடைக்கால பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்புகள் மாவட்ட மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. தொழில்மயமாக்கல், கல்வி மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் ஆகியவை கோயம்புத்தூரின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications