தமிழ்நாட்டில் தற்போது சென்னை மட்டும் அல்லாமல் பல முக்கிய மாவட்டங்கள் அதிகப்படியான அரசு முதலீட்டு திட்டங்களால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் முக்கியமாக கோயம்புத்தூர் அரசு முதலீடுகள் மட்டும் அல்லாமல் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த வாரம் துவங்கப்பட்டு உள்ளது. இத்திட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த கோயம்புத்தூர்-ம் பளபள-ன்னு மாறப்போகிறது.
கோவை மாவட்டத்தில் சுமார் 1010.19 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கிவைத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 1010.19 கோடி ரூபாய் மதிப்பிலான செலவின் பெரும்பகுதி, கிட்டத்தட்ட 860.80 கோடி ரூபாய் செலவில் TWAD வாரியத்தால் (Tamil Nadu Water Supply and Drainage Board) செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் இதுவரையில் பாதாள சாக்கடை இல்லாத இடங்கள் என பட்டியலிடப்பட்டு சேர்க்கப்பட்டு உள்ள இடங்களும் அடக்கம்.
இதை தொடர்ந்து 40.67 கோடி ரூபாயில் ரேஸ்கோர்ஸ் வழியாக மாதிரி சாலை அமைத்தல், 31.65 கோடி ரூபாயில் செல்வம்பதி மற்றும் குமாரசாமி தண்ணீர் டேங்க், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் நஞ்சுண்டாபுரத்தில் 40 MLD சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவுதல், 19.36 கோடி மதிப்பில் கிருஷ்ணாம்பதி குளம் மேம்பாடு ஆகிய பணிகளும் அடங்கும்.

இதோடு நிற்கவில்லை கோயம்புத்தூர் சாலையோரங்களில் குவிந்துள்ள மணலை அகற்றுவதற்கு வாகனங்களை வழங்குதல் மற்றும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மைக்கான வாகனங்கள் வாங்கப்பட உள்ளது.

வெள்ளலூரில் 75 லட்சம் மதிப்பில் வாரச்சந்தை, மாநகராட்சி பணிகளுக்கு கூடுதல் ஊழியர்களை நியமித்தல், சூலூர், கண்ணம்பாளையம், கோட்டூர், திருமலையாம்பாளையம், வேட்டைக்காரன்புதூர் ஆகிய நகர பஞ்சாயத்துகளுக்கு வாகனங்கள் வழங்குதல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் டாடாபாத் பகுதியில் ஒரு அறிவியல் பூங்கா நிறுவப்பட உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications