தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ச்சி அடையும் பகுதியாக கோயம்புத்தூர் விளங்கும் வேளையில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கண்கள் கோவை மீது திரும்பியுள்ளது. பல வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் சீட் ஃபண்டிங் செய்ய கோயம்புத்தூரில் அலுவலகத்தை துவங்கியுள்ளது என்றால் மிகையில்லை.
தற்போது ஒரு படிக்கு மேல் உலகிலேயே மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவின் FIDELITY, கோயம்புத்தூர் பிராந்தியத்தின் முக்கிய வர்த்தக துறையாக இருக்கும் டெக்ஸ்டைல் துறையின் முன்னணி நிறுவனமான KPR MILLS நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்து தனது கோயம்புத்தூர் முதலீட்டு பயணத்திற்கு அடித்தளமிட்டு உள்ளது.

FIDELITY நிறுவனம் பல நாடுகளில், பல துறையை சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் வழக்கத்தை கொண்டு உள்ளது. அமெரிக்க முதலீடு சந்தையில் இருந்து தடுமாற்றங்கள் குறைந்துள்ள காரணத்தால் பெரிய முதலீட்டு நிறுவனம் மீண்டும் அதிரடி காட்ட துவங்கியுள்ளது.
இந்த நிலையில் ஜூன் மாதம் கோவை பழமுதிர் நிலையம் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை சுமார் 600 கோடி ரூபாய்க்கு அமெரிக்கா தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனம் செய்தது. இதை தொடர்ந்து தற்போது FIDELITY நிறுவனம் இதே கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான கேபிஆர் மில்ஸ்-ல் முதலீடு செய்துள்ளது.

கேபிஆர் மில்ஸ் நிறுவனம் 24,629 கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பிடப்படும் வேளையில், இந்த நிறுவனத்தில் சுமார் 1 சதவீத பங்குகளை FIDELITY நிறுவனம் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 1,615.99 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளது கேபிஆர் மில்ஸ் நிறுவனம். மேலும் கேபிஆர் மில்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

கேபிஆர் மில்ஸ் நிறுவனம் நூல், துணி, ஆடைகள் ஆகியவற்றை டெக்ஸ்டைல் துறையில் தயாரிக்கும் வேளையில் மறுபுறம் சர்க்கரை தயாரிப்பிலும் KRP SUGARS நிறுவனம் வாயிலாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 10.84 சதவீதம் வளர்ச்சி அடைந்தாலும் இந்த முதலீட்டுக்கு பின்பு பல ரீடைல் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்த நிலையில் கடந்த 5 நாள் வர்த்தகத்தில் 2.51 சதவீதம் சரிந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications