இந்தியாவில் புதிய தொழில்நுட்பத்தை அனைத்து தரப்பு மக்களும் வேகமாக பயன்படுத்த துவங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கும் வேளையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையான யூபிஐ சேவையை பிராண்டட் கடைகள், மளிகை கடைகள், பெட்டி கடைகள், தள்ளுவண்டி கடைகளை, சாலையோர வியாபாரிகள் பயன்படுத்துவதை தாண்டி...
தற்போது இந்தியாவில் முதல் முறையாக ஓடும் பேருந்தில் யூபிஐ சேவை மூலம் டிக்கெட்-க்கு பணம் செலுத்தும் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம், தங்களுடைய ஐந்து பேருந்துகளில் க்யூஆர் கோட் மூலம் இயங்கும் யூபிஐ பேமெண்ட் சேவையை அறிமுகப்படுத்தி பஸ் டிக்கெட்-க்கு பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்து, ஊரக போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனமான ஜெய் சக்தி பஸ் சர்வீசஸ் நிறுவனம் கோயம்புத்தூரில் வடவள்ளி - ஒண்டிப்புதூர், கீரநத்தம் - செல்வபுரம், மதுக்கரை மார்க்கெட் - ஒண்டிப்புதூர் மற்றும் சாய்பாபா காலனி ஆகிய வழித்தடங்களில் ஐந்து பேருந்துகளை இயக்கி வருகிறது.
பஸ்-களில் டிக்கெட் வாங்கும் போது இருக்கும் பெரிய பிரச்சனை சில்லறை கொடுப்பது தான், இது பயணிகளுக்கும் பிரச்சனை, நடத்துனருக்கும் பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் QR code வாயிலாக இயங்கும் யூபிஐ சேவையை பஸ் டிக்கெட் எடுக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது .
ஜெய் சக்தி பேருந்து சேவையின் மேலாளர் கே கார்த்திக்பாபு இதுக்குறித்து கூறுகையில் பல பயணிகள் டிக்கெட் கட்டணத்திற்கான சரியான சில்லறையை கொண்டு வருவது இல்லை, இது நடத்துனர்களுக்கு சிக்கலை உருவாக்கியது. இதனால் இதற்கு மாற்று திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம்.
எங்கள் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதைக் கண்காணிக்க பிரத்யேக மென்பொருளை உருவாக்கியுள்ளோம், அதாவது, பேருந்துக்குள் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஒரு பயணி டிக்கெட் கட்டணத்தை செலுத்தும்போது, நடத்துனர் மற்றும் மேலாளருக்கு அறிவிக்கப்பட்டு, நடத்துநர்கள் பயணிகளுக்கு காகித டிக்கெட்டுகளை வழங்குவார் இதன் மூலம் பிரச்சனை எளிதாக தீர்க்கப்பட்டு உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications