தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய மாவட்டமாக கோயம்புத்தூர் இருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரும் ஆரம்பக்கட்டத்திலேயே முதலீடு செய்து நீண்டக்கால அடிப்படையில் அதிகப்படியான லாபத்தை பெரும் திட்டத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய மாவட்டமாக கோயம்புத்தூர் இருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரும் ஆரம்பக்கட்டத்திலேயே முதலீடு செய்து நீண்டக்கால அடிப்படையில் அதிகப்படியான லாபத்தை பெரும் திட்டத்தில் உள்ளனர்.

2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்க, தொழில் சங்கத் தலைவர்கள், தொழிற்பேட்டை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோருடன் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பதி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக வரும் மாதங்களில் 2,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளதை இக்கூட்டம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் 48 MSME நிறுவனங்கள் உடன் 571 கோடி ரூபாய் முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இக்கூட்டத்தில் கையெழுத்தானது.
புதிய துவக்கம் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான MSME கொள்கையின் மூலம் சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நன்மைகள் குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பதி விளக்கினார். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிப்காட், எல்காட், சிட்கோ என பல அமைப்புகள் புதிய தொழிற்சாலைகளை ஈர்க்க தேவையான வசதிகளையும், கட்டுமானங்களையும் செய்து வருகிறது. இது பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அடுத்தடுத்து ஐடி பார்க் கட்டுவதற்கான பணிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து ஐடி துறையில் முதலீடு குவிந்து வருவது தெரிந்த விஷயமாக இருந்தாலும், உற்பத்தி துறையில் 2000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு குவியும் என கணிக்கப்படுவது பெரிய டிவிஸ்ட் ஆக உள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூரில் உற்பத்தி - சேவை துறை 50:50 அளவீட்டில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications