டெல்லி: தொலைத் தொடர்பு துறைக்கு இது மிக மோசமான காலமே. தொலைத் தொடர்பு துறையிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் 2019-ம் நிதியாண்டில் 7 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சகம் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், தொலைத் தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) தகவலின் படி, தொலைத் தொடர்பு சேவைத் துறையின் சரிசெய்யப்பட்ட வருவாய் கடந்த 2018 - 2019ல் 1,44,681 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இது கடந்த 2017 - 2018ல் 1,55,680 கோடி ரூபாயாக இருந்தது. இதன் படி சுமார் 7.06 சதவிகிதம் வருவாய் வீழ்ச்சியாகும்.
வருவாய் வீழ்ச்சி
சராசரியாக ஒரு பயனுருக்கான சராசரி வருவாய் 2017 -2018ல் 124.85 ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் இதுவே 2019ம் நிதியாண்டில் 71.39 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மற்றொரு மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் தொலைத் தொடர்பு துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவரித்துள்ளார். மேலும் தொலைத் தொடர்பு துறையினரிடமும், இது குறித்து பல முறை சமீபகாலமாக பல சந்திப்புகளை நடத்தி வருகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு
அமைச்சரவை செயலாளர் தலைமையில் Committee of Secretaries குழு, தொலைத் தொடர்பு துறையில் உள்ள பிரச்சனைகளையும் பரீசிலித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தொலைத் தொடர்பு துறை எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தினை தணிப்பதற்காக, 2020 - 2021 மற்றும் 2021 - 2022ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் தொகையை செலுத்த அரசு கால அவகாசம் கொடுத்துள்ளது.
வருவாய் அதிகரிக்கலாம்
இருப்பினும் தொடர்புடைய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது. இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையின் நிகர மதிப்பும் பாதுக்காக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் நடப்பு நிதியாண்டில் இந்த வருவாயானது அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் நஷ்டத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அதிலிருந்து மீள கட்டண உயர்வு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளன.
தொடர்ந்து கட்டணம் அதிகரிப்பு
வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது மொபைல் சேவைகளுக்கான கட்டணத்தை, ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளன. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் சராசரி வருவாய் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications