மும்பை: சமூக ஊடகங்களில் தற்போது கன்டன்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. இவ்வாறு வீடியோக்களை ரெக்கார்ட் செய்து பதிவிடுபவர்கள் அதிக பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் சில வித்தியாசமான முயற்சிகளை எடுப்பார்கள். அவ்வாறு மும்பையில் முகேஷ் அம்பானியின் விட்டிற்குள் நுழைந்து வீடியோ வெளியிட முயன்ற இருவர் அம்பானி வீட்டு செக்யூரிட்டி ஊழியர்களால் தடுக்கப்பட்டு பல்பு வாங்கினர்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிரம்மாண்டமான வீடு மும்பையில் இருக்கிறது. அன்டிலியா என அழைக்கப்படும் இந்த நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர குடியிருப்பில் அத்தனை எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது. இந்த வீட்டை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் இருப்பார்கள்.

இந்த நிலையில் கன்டன்ட் கிரியேட்டர்கள் இருவர் அதிரடியாக முகேஷ் அம்பானியின் அன்டிலியா குடியிருப்புக்குள் நுழைய முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வைரல் ஆகியுள்ளது.
பென் சுமடிவீரா (Ben Sumadiwira) மற்றும் அரிஸ் ஈகர் (Aris Yeager) ஆகிய இருவரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் அன்டிலியா குடியிருப்புகள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்காமல் வெளியேற்றினர் .
நாங்கள் அம்பானியின் நண்பர்கள் அவரை சந்திக்க வந்திருக்கிறோம் என அவர்கள் என்னென்னவோ கூறி பார்த்தனர் இருந்தாலும் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு சுமார் 46 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது , 10 லட்சம் பேர் இதனை லைக் செய்துள்ளனர், 8000-க்கும் அதிகமானவர்கள் இதில் கமெண்ட் செய்துள்ளனர்.
இருவரும் அங்கிருக்கும் பாதுகாவலர்களோடு தங்கள் பேசியதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். ஆனந்த் மற்றும் ராதிகா மெர்சட்டின் திருமணத்தில் தாங்கள் கலந்து கொண்டதாகவும் அப்போது முகேஷ் அம்பானி தங்களை அன்டிலியா குடியிருப்பில் வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருந்தாலும் பாதுகாவலர்கள் அதனை ஏற்கவில்லை. நாங்களும் வசதி படைத்தவர்கள் தான் அம்பானி குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் தான் என அவர்கள் கூறுகின்றனர் பாதுகாவலர்கள் அவற்றை நம்பவில்லை.
நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என அவர் எங்களிடம் கூறி இருக்கிறார், நீங்களே அவரிடம் இங்கு இருந்து தொலைபேசியில் நாங்கள் வந்திருக்கிறோம் என சொல்லிப் பாருங்கள் என இருவரும் கூறுகின்றனர்.
அதற்கு அம்பானி குடும்பத்தினர் தற்போது வீட்டில் இல்லை என்றும் வெளிநாட்டில் இருக்கிறார் என்றும் பாதுகாவலர்கள் பதிலளிக்கின்றனர். வீட்டிற்கு வெளியே காத்திருக்கிறோம் என இருவரும் கூறிய போது இது வீடு உணவகம் கிடையாது எனக் கூறி பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புற படுத்துகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications