சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன்மூலம் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ. 2 என்ற அளவில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
அதாவது, கடந்த 2022-ல் பெட்ரோல் ரூ.8, மற்றும் டீசல் ரூ.6 என கலால் வரி குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை. இந்த விலை உயர்வு நாளை முதல் (ஏப்.8) அமலாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் வரி மூலம் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சமீபத்திய கலால் வரி உயர்வு, நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்தும் நோக்கில் அல்ல என்றும், மானிய விலை எரிவாயு விலைகளால் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ரூ.43,000 கோடி இழப்பை ஈடுசெய்ய உதவும் நோக்கம் கொண்டது என்றும் பூரி தெளிவுபடுத்தினார்.
இந்தநிலையில், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வுடன், பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.803 லிருந்து ரூ.853 ஆக உயர்ந்துள்ளது. உஜ்வலா திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.503க்கு பதிலாக ரூ.553 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரு சிலிண்டர் ரூ.50 உயர்வு என்பது, உஜ்வலா பயனாளிகளுக்கும், உஜ்வலா அல்லாதவர்களுக்கும் சமமாகவே பொருந்தும் எனவும் இந்த விலை மாற்றம் ஒவ்வொரு 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள முறைப்படி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 2024 முதல் இப்போது வரை மாற்றமின்றி இருந்தது. இப்போது தான் அதில் முதன்முறையாக ரூ.50 உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி, புதிய நிதியாண்டில் பொதுமக்களுக்கு சிறிய அளவில் நிவாரணம் வழங்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிகத் துறைக்கான எல்பிஜி சிலிண்டரின் விலையை குறைத்தன. அதனடிப்படையில், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.41 குறைக்கப்பட்டது. இந்த புதிய விலையுடன், தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் சந்தை விலை ரூ.1,762 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications