இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மருந்து ஒத்திகை துவங்கியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்புவோம் என்ற புதிய நம்பிக்கை வந்துள்ளது.
Recommended Video
இந்நிலையில் இந்தியாவில் முதல் கட்டமாக மத்திய அரசு சுமார் 30 கோடி இந்திய மக்களுக்குத் தடுப்பு மருந்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காகப் பல உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு வாங்க உள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்து ஒத்திகை
கொரோனா தடுப்பூசி மருந்து ஒத்திகை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரன்தீப் குலேரியா கூறுகையில், மத்திய அரசு கொரோனா தடுப்பு மருந்தை முதல் ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு முதலில் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் முதல்கட்ட கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
30 கோடி மக்கள்
மேலும் அடுத்த 6 முதல் 8 மாத காலத்தில் மத்திய அரசு இந்தியாவில் சுமார் 30 கோடி மக்களுக்குக் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்த அனைவரும் முதலில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற உள்ளனர் எனவும் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு கோவிட் வேக்சின்
இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு கோவிட் வேக்சின் உற்பத்தி செய்து மத்திய அரசு மற்றும் மருத்துவ நிபுணர் குழு அவரசகால அடிப்படையில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மருந்தை மக்களுக்குச் செலுத்தும் ஒத்திகை இன்று துவங்கியுள்ளது.
முற்றிலும் இலவசம்
மேலும் கொரோனா மருந்து எவ்வளவு..? மருந்தைப் பெற எவ்வளவு செலவாகும்..? என்ற கேள்வி அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் இருக்கும் நிலையில், ரன்தீப் குலேரியா முதற்கட்டமாக இந்தியாவில் போடப்படும் கொரோனா தொற்று மிகவும் முக்கியமானவர்களுக்கும், ஆபத்துக் கட்டத்தில் இருப்பவர்களுக்கும் செலுத்தத் திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைவரும் இலவசமாகத் தடுப்பு மருந்தைப் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
28 நாள் இடைவேளை
மேலும் கொரோனா தடுப்பு மருந்து 2 முறை செலுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் 28 நாள் இடைவேளையில் 2வது தடுப்பூசி போட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளது. ஆனால் பிரிட்டன் போன்ற நாடுகளில் 2வது தடுப்பூசியை 28 நாளில் இருந்து 12 வார இடைவெளியில் அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தக் கால இடைவெளியில் அதிகளவிலான மக்கள் முதல் சுற்றுத் தடுப்பு மருந்தைப் பெற முடியும்.