சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது பல நாடுகளுக்கு பரவியுள்ளது.
சீனாவில் அதன் தாக்கம் சற்று குறைந்ததாக கூறப்பட்டாலும், மற்ற பல நாடுகளில் தனது ஆட்டத்தினை தொடங்கியுள்ளது கொரோனா.
இது எல்லாவற்றிற்கும் மத்தியில் இந்தியாவிலும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் இந்தியாவில் 31 பேர் இதனால் தாக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு
பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி கண்ட சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளே இந்த கொரோனாவால் தங்கள் பொருளாதாரம் எந்தளவுக்கு பாதிக்குமோ என்று அஞ்சி வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே பலத்த அடி வாங்கியுள்ள இந்திய பொருளாதாரம், கொரோனாவால் எப்படி பாதிக்குமோ என்று எண்ண வைத்துள்ளது.
சீனாவின் ஜிடிபி குறையலாம்
கொரோனா வைரஸால் பொருளாதார மந்தநிலை, வர்த்தகம், விநியோகச் சங்கிலி, வர்த்தகத்தில் பாதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த நிலையில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020ல் விட 1 - 1.25% புள்ளிகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக ஜிடிபியிலும் வீழ்ச்சி காணலாம்
இந்த வீழ்ச்சியால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 19.71% சீனா கொண்டுள்ளது. ஆக இது உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகத்தை பொறுத்தவரை, சீனா உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் மற்றும் இரண்டாவது பெரிய இறக்குமதியாளர் ஆகும். இது உலக ஏற்றுமதியில் 13%மும், இறக்குமதியில் 11%மும் கொண்டுள்ளது. இது நாட்டில் சுமார் 500 மில்லியன் மக்களை பாதிக்கும் அது அதன் பொருட்களின் நுகர்வுகளை ஆழமாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதெல்லாம் சரி இந்திய பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாருங்கள் பார்ப்போம்.
முக்கிய மூலதனம்
பெரிய அளவில் இந்திய தொழிலை பாதிக்கும் விதமாக இறக்குமதி செய்யப்படும் முக்கிய மூலதன பொருட்களில், முதல் 20 பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆக இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியில் சீனாவிற்கும் கணிசமான பங்கு உண்டு எனலாம்.
பாதிப்பு
இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக் துறை சார்ந்த இறக்குமதியில் 45% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகின் மூன்றில் ஒரு பங்கு இயந்திரங்கள் இறக்குமதி மற்றும் உலகில் இருந்து இந்தியா வாங்கும் கரிம வேதிப்பொருட்களில் கிட்டதட்ட ஐந்தில் இரண்டு பங்கு சீனாவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மருந்து உற்பத்திக்கான மூலதனம்
இதே போல வாகன பாகங்கள் மற்றும் உரங்களுக்கு இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 25%க்கும் அதிகமாகும். மேலும் தற்போது செயலில் உள்ள 65 - 70% செயலில் உள்ள மருந்து பொருட்களில் 90% சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருகின்றன. ஆக தற்போது சீனாவின் கொரோனா காரணமாக நிலைகுலைந்து போயுள்ள வைரஸால், இந்திய தொழில் துறையில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாம் கூறலாம்.
இந்திய ஏற்றுமதியில் சீனா முக்கிய பங்கு
மொத்தம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆர்கானிக் கெமிக்கல்ஸில் 37% சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதே கனிம இரசாயனங்கள், மெடிக்கல் & பார்மா பொருட்களில் 38%மும், இதே சாயங்கள் இறக்குமதி 28% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியை பொறுத்தவரை சீனா இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பங்காளியாகும். இது மொத்தம் 5% பங்கினைக் கொண்டுள்ளது.
சீனாவில் உள்ள இந்திய நிறுவனங்கள்
மேலும் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன என்பதையும் நாம் புறக்கணிக்க முடியாது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் சுமார் 72% நிறுவனங்கள் ஹாங்காய், பெய்ஜிங், குவாங்டாங் மாகாணங்கள் ஜியாங்சு மற்றும் ஷாண்டோங் போன்ற நகரங்களில் உள்ளன.
உற்பத்தி பாதிப்பு
மேற்கூறிய நகரங்களில் உள்ள நிறுவனங்களில் தொழில் துறை உற்பத்தி, உற்பத்தி சேவைகள், ஐடி மற்றும் பிபிஓ, லாகிஸ்டிக்ஸ், கெமிக்கல்ஸ், ஏர்லைன்ஸ் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆக இதன் தாக்கம் கரிம வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், மீன் பொருட்கள், பருத்தி, தாதுக்கள் போன்ற துறைகளில் ஏற்படக்கூடும். மேலும் கப்பல், மருந்துகள், ஆட்டோமொபைல் துறை, மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்ததால் இந்தியாவில் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கெமிக்கல் துறை
சீனாவில் தற்போது சில கெமிக்கல் ரசாயன ஆலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதி, தளவாடங்கள் கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் மூலப் பொருட்கள் வினியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதால் உற்பத்தியில் 20% பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கெமிக்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கப்பல் துறை
கொரோனாவின் தாக்கத்தால் கார்கோ துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் மூலமாகவே செய்யப்படும் நிலையில், கொரோனாவினால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மொத்தமாக ஷிப்பிங் வர்த்தகத்தில் 75 -80% பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்டோமொபைல் துறையில் பாதிப்பு
ஆட்டோமொபைல் துறையே பெரும் அடி வாங்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலதன பொருட்களை சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. எனினும் தற்போதைய நிலையில் தேவையான மூலக்கூறுகள் இருந்தாலும், சீனாவின் இறக்குமதி இனியும் பாதி பாதிக்கப்பட்டால் இந்திய ஆட்டோமொபைல் துறையில் 8 -10% பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பார்மா துறை
பார்மா துறையில் இந்தியா உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியா சப்ளை செய்து வந்தாலும், மருந்து உற்பத்தியில் உபயோகப்படுத்தும் சில மூலதனங்களுக்கு இந்தியா சீனாவினை நம்பியுள்ளது. இதனால் இந்தியாவில் மருந்து உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவுளித் தொழிலும் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பல ஆடைகள் அல்லது ஜவுளி தொழில் சாலைகள், இந்தியாவில் இருந்து நூல், துணி மற்றும் பிற மூலப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பினை சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் பொருட்கள் அதிக அளவில் தேங்கியுள்ளதால் விலை குறையலாம் என்றும் கூறப்படுகிறது.
சோலார் பவர்
இந்திய சோலார் டெவலப்பர்களுக்கு தேவையான சோலார் பேனல்கள் அல்லது தேவையான கலங்கள், மேலும் சோலார் சம்பந்தமான மூலப் பொருட்கள் இறக்குமதி சீனாவில் இருந்து தடைபட்டுள்ளன. இதனால் இங்கு சோலார் பேனல்கள் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக் துறை
மின்னணு துறையில் சீனா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதிலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் மூலப் பொருட்களில் முக்கால்வாசி சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவின் எலக்ட்ரானிக் துறை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் மூலக்கூறுகள் கிடைக்காவிடில் இந்தியாவில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐடி மற்றும் சுற்றுலா துறை
கொரோனா வைரஸ் வெடித்ததால் சீனாவில் புத்தாண்டு விடுமுறைகளை அடுத்து தற்போது வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்திய தகவல் தொழில் நுட்ப துறையில் நிறுவனங்களின் வருவாய் மற்றும் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து துறை கொரோனாவால் பாதிப்படையலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கொரோனா வைரஸ் சுற்றுலா துறையினரின் வருவாயையும் பாதிக்கும்.